Published on 14/02/2021 | Edited on 14/02/2021

மினி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தற்பொழுது ஏற்பட்ட இந்த விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஆந்திராவில் மினி பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.