ஹோண்டா நிறுவனம், தனது நிறுவனத்தின் கார்களின் விலையை ஜனவரி மாதம் முதல் உயர்த்தபோவதாக அறிவித்துள்ளது. வாகன உற்பத்தி உள்ளீடு செலவ 4% உயர்ந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இன்னும் குறிப்பிட்ட விலையையோ அல்லது சதவீதத்தையோ அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.
ஏற்கனவே இதே காரணத்தினால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலையை 40,000 வரை உயரும் என அறிவித்திருந்தது. அதேபோல் நிசான் இந்தியா நிறுவனத்தின் கார்கள் 4% வரை விலை உயரும் என்றும், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார்கள் 2.5% விலை உயரும் என்றும், ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை 3% விலை உயரும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.