Skip to main content

பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிர்ச்சியளித்த திரிணாமூல் - காங்கிரஸோடு கைகோர்த்த முக்கிய கட்சி!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

RAHUL - GFP

 

உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கோவா ஃபார்வேர்டு கட்சி காங்கிரஸோடு கைகோர்த்துள்ளது. இரு கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று கோவா ஃபார்வேர்டு கட்சி தலைவர் விஜய் சர்தேசாயை தனது கட்சியினருடன் ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளார்.

 

இந்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள கோவா ஃபார்வேர்டு கட்சி, அதற்கு 'டீம் கோவா' என தலைப்பிட்டுள்ளது. விஜய் சர்தேசாயின் கோவா ஃபார்வேர்டு கட்சி சிறிய கட்சி என்றாலும், கோவா அரசியலில் முக்கிய பங்காற்றிவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் 17 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 13 இடங்களில் மட்டுமே வென்றது. ஆயினும் பாஜக கோவா ஃபார்வேர்டு கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசில் விஜய் சர்தேசாய் துணை முதல்வராகவும் இருந்தார்.

 

அதன்பின்னர் மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பின்னர் பிறகு, 10 காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பாஜகவில் இணைந்து பாஜகவின் பலத்தை அதிகரித்தனர். இதனையடுத்து விஜய் சர்தேசாய் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து வந்த கோவா ஃபார்வேர்டு கட்சி, கடந்த ஏப்ரலில் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

 

அதேபோல் அண்மையில், கோவா ஃபார்வேர்டு கட்சியை, கோவா திரிணாமூல் கட்சியோடு இணைக்குமாறு பிரசாந்த் கிஷோர் அக்கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாயிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால்  விஜய் சர்தேசாய் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனைத்தொடர்ந்து கோவா வந்த மம்தா, தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் சர்தேசாயிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச்சூழலில், சில தினங்களுக்கு முன்னர் கோவா ஃபார்வேர்டு கட்சியின் செயல் தலைவரையும், சில நிர்வாகிகளையும் திரிணாமூல் கட்சி தங்கள் பக்கம் இழுத்து அதிர்ச்சியளித்தது. இந்தச்சூழலில் கோவாஃபார்வேர்டு கட்சி காங்கிரஸோடு கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.