Skip to main content

'பரம்பரையில் முதல் டாடி'ஸ் லிட்டில் பிரின்சஸ்' - வரவேற்பால் வாயில் விரல் வைத்த ஊர் மக்கள் 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

family brought their newborn girlchild in a chopper

 

தனக்கு பிறந்த பெண் குழந்தையை தந்தை ஒருவர் ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்துவந்த நெகிழ்ச்சி சம்பவம் புனேவில் நிகழ்ந்துள்ளது. 

 

புனே நகரின் ஷெல்கன் பகுதியைச் சேர்ந்த விஷால் ஜரேக்கர் தனக்கு பிறந்த பெண் குழந்தையை மருத்துவமனையில் இருந்து முதன்முறையாக வீட்டிற்கு அழைத்துவந்தபோது ஹெலிகாப்டரில் அழைத்துவந்துள்ளார். அவரது குடும்பத்தில் இதுவரை பெண் குழந்தைகளே கிடையாதாம். எனவே தங்களது குடும்பத்தில் முதன்முறையாக பிறந்துள்ள பெண் குழந்தையின் வருகையை சிறப்பிக்கும் விதமாக ஒரு லட்ச ரூபாய் வாடகை கட்டணம் செலுத்தி இவ்வாறு ஹெலிகாப்டரில் அழைத்து வந்ததாக விஷால் ஜரேக்கர் தெரிவிக்கிறார். 

 

விஷால் ஜரேக்கர் தனது குழந்தையுடன் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹோட்டல் அறையில் அரங்கேறிய கொடூரம்; காதலியை சுட்டுக் கொன்ற காதலன்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Boyfriend incident girlfriend in Pune

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் வந்தனா திவேதி. 26 வயதான இவர், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த 27 ஆம் தேதி இரவு வந்தனா தன்னுடைய காதலனுடன் சேர்ந்து ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறை எண் 306ல் தங்கியுள்ளார். ஆனால், அடுத்த நாள் காலை அந்த அறையில் தனியாக இருந்த வந்தனா சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகம் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், உடனடியாக ஹோட்டலுக்கு வந்த போலீசார், அறையில் இருந்த வந்தனாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புனே போலீசார், இளம்பெண் வந்தனா திவேதி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வந்தனாவுடன் வந்த இளைஞர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் பதற்றத்துடன் ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. மேலும், அந்த இளைஞரின் பெயர் ரிஷப் நிகாம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மும்பை பகுதியில் தலைமறைவாக இருந்த ரிஷப் நிகாமை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது. அதில், போலீசால் கைது செய்யப்பட்ட ரிஷப் நிகாமும் ஹோட்டல் அறையில் கொலை செய்யப்பட்ட வந்தனாவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இவர்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இதனிடையே, லக்னோவில் இருந்த வந்தனாவுக்கு புனேவில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை கிடைத்ததால் அவர் அங்கிருந்து புனேவிற்கு வந்துவிட்டார். ஆனால், அதில் ரிஷப் நிகாமிற்கு பிடிக்கவில்லை. தன் காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாள் என்று ரிஷப் நிகாம்மிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது வாழ்க்கையில் காலப்போக்கில் சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரிஷப்பிற்கும் வந்தனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில், வந்தனா தன்னை விட்டுட்டு வேறு நபரை காதலிக்கலாம் என ரிஷப் நினைத்துக்கொண்டிருந்தார். ரிஷப்பிற்கு வந்தனா மீது ஏற்பட்டிருந்த சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதன் நீட்சியாக, ரிஷப்பை குறிப்பிட்ட சில நபர்கள் சமீபத்தில் 2 முறை தாக்கியுள்ளனர். மேலும், வந்தனா தான் இந்த தாக்குதலுக்கு மூலகாரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ரிஷப்பிற்கு தன் காதலி வந்தனா மீது இருந்த கோபம், ஒருகட்டத்தில் கொலை வெறியாக மாறியுள்ளது.

இத்தகைய சூழலில், சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, ரிஷப்பிற்கும் வந்தனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த  ரிஷப், தன் காதலி வந்தனாவை கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்தனாவை கொலை செய்யும் முடிவிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில், ஹிஞ்சேவாடி பகுதியில் மராத்தா சமூக இட ஒதுக்கீடு வெற்றி கொண்டாட்டம் நடந்துள்ளது. மேலும், அந்த பகுதி முழுக்க அதிகளவில்  பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தது.

அப்போது, சுதாரித்துக்கொண்ட ரிஷப், அவர்கள் பட்டாசு வெடிக்கும் நேரம் பார்த்து வந்தனாவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதில், அந்த பெண்ணின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் 4 குண்டுகள் பாய்ந்து வந்தனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். அதே வேளையில், பட்டாசு சத்தம் காரணமாகத் துப்பாக்கியால் சுட்ட சத்தம் வெளியே கேட்காமல் இருந்தது" விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, கொலையாளி ரிஷப்பிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, பெண் ஐடி ஊழியர் ஒருவர் தனது காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஹோட்டல் அறையில் கிடந்த இளம்பெண்ணின் சடலம்; காதலன் அளித்த பகீர் வாக்குமூலம்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Boyfriend's confession on incident of a young woman lying in a hotel room

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் வந்தனா திவேதி (26). இவர் நேற்று, ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி வந்தார். இந்நிலையில், அறையை சுத்தம் செய்வதற்காக ஹோட்டல் ஊழியர் ஒருவர், அறைக்குள் வந்து பார்த்த போது அங்கு திவேதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர், ஹோட்டல் நிர்வாகத்திடம் தகவல் கொடுத்தார். ஹோட்டல் நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த திவேதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  அதில், வந்தனா திவேதி தங்கியிருந்த அறை முன்பதிவு விவரங்களில் வந்தனா மற்றும் ரிஷப் நிகாம் ஆகிய பெயர்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில், நள்ளிரவு நேரத்தில் திவேதியின் அறையை விட்டு ஒரு மர்ம நபர் வெளியேறுவதை கண்டுள்ளனர். இதனையடுத்து, போலீசார் சோதனைச் சாவடிகளில் உள்ள வாகனங்களை சோதனை செய்து அந்த மர்ம நபரைப் பிடித்ததில் அது ரிஷப் நிகாம் என்பது தெரியவந்தது. அதன் பின்னர், அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், வந்தனா திவேதியும், இளைஞர் ரிஷப் நிகாமும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று, இவர்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், இளைஞர் ரிஷப் நிகாம் தான் வைத்திருந்த துப்பாக்கியால், வந்தனா திவேதியின் தலையில் சுட்டு கொலை செய்துள்ளார். 

பின்னர், அங்கிருந்து மும்பைக்கு தப்பி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவலுக்காக ரிஷப் நிகாமிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டல் அறையில், காதலித்த பெண்ணை, இளைஞர் சுட்டுக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.