Skip to main content

தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும் டாலர் மதிப்பு... அருண் ஜெட்லி கருத்து...

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
dollar

 

தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கொண்டு வருகிறது. செவ்வாய் கிழமை வர்த்தகத்தின் இடையே டாலருக்கு நிகரான மதிப்பு 70.09 ரூபாயாகச் சரிந்தது. இதுத்தொடர்பாக கடந்த செவ்வாய்கிழமை அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு அந்நிய செலாவணி  கையிருப்பு உள்ளதாகவும், இந்த ஏற்றத் தாழ்வுகளை அரசு தொடர்ந்து கவனித்து வருவதாகவும், மேலும் 40,270 கோடி ரூபாய் அந்நிய செலாவணி கையிருப்பு  இருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை 11.20 நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பு 70.24 என வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் கடத்தல் சம்பவங்கள்; சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

trichy international airport foreign currency incident 

 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (27.02.2023) மாலை சிங்கப்பூருக்கு புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் காத்திருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு ஆண் பயணி கையில் கொண்டு சென்ற கைப்பையில் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட டாலர்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 24 லட்சத்து 57 ஆயிரம் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அதேபோல் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு பெண் பயணி கொண்டு சென்ற கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தனர் அதில் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண் பயணியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த 45 லட்சம் மதிப்பிலான கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

“நாங்கள் விழவில்லை, பள்ளத்துக்குள் இருக்கிறோம்” - நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி 

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

mp su Venkatesan talk about nirmala sitharaman rupee and dollar

 

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக நான் பார்க்கவில்லை, டாலரின் மதிப்பு உயர்வதாகவே நான் பார்க்கிறேன் எனக் கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

 

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

 

 

அப்போது நிருபர் ஒருவர், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து கேள்வி எழுப்ப, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நொடிகள் அமைதி காத்து சிந்தித்து, "டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக நான் பார்க்கவில்லை, டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன். அமெரிக்காவின் டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் பணத்தின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாணய சந்தையில் வளர்ந்து வரும் நாடுகளின் நாணயத்தின் மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வாகவே உள்ளது”  எனத் தெரிவித்தார். 

 

இந்நிலையில் நிதி அமைச்சரின் பதில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளானதோடு, இணையதள வாசிகள் பலர் அதனை விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில், ”நாங்கள் விழவில்லை பள்ளத்துக்குள் இருக்கிறோம். நாங்கள் பட்டினியாக இல்லை சாப்பிடாமல் இருக்கிறோம். விலை ஏறவில்லை நாங்கள் அதிகமாக கொடுத்து வாங்குகிறோம். ரூபாய் இறங்கவில்லை டாலர்தான் ஏறி ஒய்யாரம் காட்டுகிறது. இவ்வளவையும்  புரிந்துகொண்டால் நீங்கள் இந்திய பொருளாதாரத்தின் புலி” என கடுமையாக விமர்சித்துள்ளார்.