Skip to main content

தொடர் முன்னேற்றத்தில் டெய்ம்லர் நிறுவனம்...

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

பாரத் பென்ஸ், மெர்சிட்ஸ் பென்ஸ் ஆகிய பிராண்டுகளில் வணிக ரீதியிலான வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன நிறுவனம், விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருகிறது. 2018-ம் ஆண்டில் இதன் விற்பனை 35% உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

daimler

 

2017-ல் டெய்ம்லர் நிறுவனம் 28% வளர்ச்சியைக் கொண்டிருந்தது. அதுவே 2018-ல் அநிறுவனத்தின் வளர்ச்சி 35% உயர்ந்துள்ளது. மேலும் மொத்தம் 22,532 டிரக்குகள் விற்பனையாகியுள்ளதாகவும், இது 2017-ல் 16,717 என இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் உலக அளவில் டெய்ம்லர் நிறுவனத்தின் 5-வது பெரிய சந்தையாக இந்தியாவை உருவாக்கியிருப்பதாகவும் அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்