Skip to main content

தகனம் செய்யும் மைதானம்..தகரத்தை வைத்து மறைத்த அரசு - உ.பி அவலம்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

lucknow cremation site

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கரோனா பரவல் உச்சம் தொட்டுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் கரோனாவிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இதனால் உடல்களைத் தகனம் செய்யும் இடமும் நிரம்பி வழியும் அவலம் ஏற்பட்டுள்ளது. பைன்சாகுண்ட் பகுதியில் உள்ள தகனம் செய்யும் பகுதியிலும் உடல்கள் குவிந்து வருகின்றன. ஒரேநேரத்தில் பல்வேறு உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. பைன்சாகுண்ட் தகனம் செய்யும் மைதானத்தில், உடல்கள் தகனம் செய்யப்படும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகின.

 

இந்தநிலையில், பைன்சாகுண்ட் தகன மைதானத்தை, தகரங்களைக் கொண்டு அடைத்துள்ளது லக்னோ மாநகராட்சி. அங்கு குவியும் உடல்களின் எண்ணிக்கையை மறைக்கவே இந்த நடவடிக்கைக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி, “கடந்த 10 நாட்களில் 630 உடல்கள் நகரம் முழுவதும் தகனம் செய்வதற்காக எடுத்துவரப்பட்டன. புதன்கிழமை, பைன்சாகுண்ட் மற்றும் குலலகாட் பகுதிகளில் உள்ள தகனம் செய்யும் இடங்களுக்கு 97 உடல்கள் கொண்டுவரப்பட்டன. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் உடல்களை தகனம் செய்ய டோக்கன் வழங்கப்பட்டன. தகனம் செய்யும் இடத்தில் உடல்களுக்கு இடமில்லை; மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் படுக்கை இல்லை. பைன்சாகுண்ட் மைதானத்தை மூடுவது, தகனம் செய்ய கொண்டுவரப்படும் உடல்களின் எண்ணிக்கையை மறைக்கும் அப்பட்டமான முயற்சி என தெரிவித்துள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "அவலத்தை மறைக்க நேரத்தையும், வளங்களையும், ஆற்றலையும் வீணாக்குவதற்குப் பதிலாக, தயவுசெய்து தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள். இது காலத்தின் தேவை" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.