Skip to main content

கரோனா, ஒமிக்ரான் பரவல்- புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது புதுச்சேரி அரசு!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Corona, Omigron Spread- Puducherry Government Announces New Restrictions!

 

கரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு.

 

அதன்படி, கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கல்வி நிறுவனங்கள் செயல்படும். உணவகங்கள், பார்கள், மதுபானக் கூடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மால்கள், வணிக நிறுவனங்கள், கலையரங்கம், அரங்குகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் பக்தர்களின்றி குடமுழுக்கு விழாவை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் ஜனவரி 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன், "இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே, புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கப்படுவர். முழு ஊரடங்கு சூழல் உருவாக்கப்படுவதைத் தவிர்ப்பது என்பதுதான் புதுச்சேரி அரசின் எண்ணமாக உள்ளது" எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.