Skip to main content

"அரசியல் சாசனத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

"The Constitution must be fully complied with" - Prime Minister Narendra Modi's speech!

 

1946ஆம் ஆண்டில் இதே நவம்பர் 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையொட்டி இந்த நாளை அரசியலமைப்பு தினமாக கொண்டாட மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு முடிவெடுத்தது. அதன்படி ஆண்டுதோறும் இந்த அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

 

அந்தவகையில், இன்று (26/11/2021) அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாந் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்றத்தை வணங்கும் தினம் இன்று. அரசியல் சாசனத்தை நாம் அனைவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அம்பேத்கர் பரிசளித்த அரசியல் சாசனத்தை நாம் எப்போதும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்துத் துறைகளிலும் நாடு வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. உட்கட்சி ஜனநாயகத்தைப் பின்பற்றாத கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தை எப்படி காக்கும்? என்று கேள்வி எழுப்பிய பிரதமர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துகின்றன; இது ஜனநாயகத்துக்கு எதிரானது. 

 

இந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிப்ரவரி 14; “இந்தியா என்றும் மறக்காது” - பிரதமர் மோடி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

pm modi  tweet about Pulwama incident

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்கமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் இந்தியா மறக்காது. வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை  ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Next Story

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

Chief Minister M. K. Stalin will participate in the meeting led by the Prime Minister!

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருக்கிறார். 

 

அடுத்தாண்டு ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான, முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் வரும் டிசம்பர் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

 

இதில் கலந்து கொள்வதற்காக வரும் டிசம்பர் 4- ஆம் தேதி அன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் 5- ஆம் தேதி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தின் போது, தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழகம் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் முன் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றன. 

 

ஏற்கனவே, பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.