Skip to main content

சிபிஎஸ்இ தேர்வை ரத்துசெய்யுங்கள்! - ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோரிக்கை!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

cbsc board exams 2021

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

 

இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 7 வரை நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. கரோனா அதிவேகமாகப் பரவி வருவதால், மாணவ- மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ. தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

இதற்கிடையே சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், ட்விட்டரில் இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி  #cancelboardexam2021 என்ற ஹாஷ் டேக்கில் மாணவ- மாணவிகளும் பொதுமக்களும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்யக் கோரி ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். அதேநேரம், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மத்திய தேர்வு வாரியத்துக்கு மனு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்கள் தொடர்பாக சர்ச்சை கேள்வி... எதிர்ப்புக்கு பணிந்த சிபிஎஸ்சி!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

yy

 

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சிபிஎஸ்சி மாதத்தேர்வில் ஆங்கில பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று  இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் நடந்துகொள்ளும் முறை என்று கொடுக்கப்பட்டிருந்த அந்தக் கேள்வியில் பல்வேறு கருத்துகள் பெண்களுக்கு எதிராக நேரடியாக இருந்தது. அந்த வினாத்தாளில் குறிப்பாக, தற்போது கணவர்களுக்குப் பெண்கள் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள். அதனால், வேலைக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒழுக்கமின்மை அதிகரித்துவிட்டது. பெண் விடுதலை குழந்தைகளின் ஒழுக்கமின்மைக்கு முதல் காரணமாக உள்ளது. பெண் விடுதலை தற்போதைய சமூகப் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது என கேள்வியாக கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக  'எழுத்தாளர் ஒரு பேரினவாத நபர்' என்று ஒரு விடையும், 'எழுத்தாளர் வாழ்க்கையை மிக எளிதாகப் பார்க்கிறார்' என இரண்டாவது விடையும் கொடுக்கப்பட்டிருந்தது.

 

தற்போது இந்த விவகாரம் இந்தியா முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சியினரும், பெண்கள் நல அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகிறார்கள். சில அமைப்புகள் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள சிபிஎஸ்சி நிர்வாகம், தவறு நடந்துவிட்டதாகவும், இந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

 

 

Next Story

"இன்றைய சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் பெண் விடுதலையே காரணம்.." - சர்ச்சையில் சிக்கிய சிபிஎஸ்சி!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

பர


பெண்கள் தொடர்பாக சர்ச்சையான வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்சி அமைப்பின் மீது இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். சர்ச்சைகளுக்கும் சிபிஎஸ்சிக்கும் நீண்ட தொடர்பு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறையாவது சர்ச்சையான வினாத்தாளைத் தயாரித்து அரசியல் கட்சி, பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாகிவரும் வரலாறு சிபிஎஸ்சி அமைப்புக்கு உண்டு. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சிபிஎஸ்சி மாதத்தேர்வில் ஆங்கில பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வரை கொதிப்படைய வைத்துள்ளது. பெண்கள் தொடர்பாக நீண்ட பாராவாக கொடுக்கப்பட்டிருந்த அந்தக் கேள்வியில், பல்வேறு கருத்துகள் பெண்களுக்கு எதிராக நேரடியாக இருந்தன.

 

அந்த வினாத்தாளில் குறிப்பாக, தற்போது கணவர்களுக்குப் பெண்கள் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள். அதனால், வேலைக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒழுக்கமின்மை அதிகரித்துவிட்டது. பெண் விடுதலை, குழந்தைகளின் ஒழுக்கமின்மைக்கு முதல் காரணமாக உள்ளது. பெண் விடுதலை தற்போதைய சமூகப் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது என ஒவ்வொரு வரியாக கொடுத்துவிட்டு, கீழே இந்தக் கேள்விகளுக்கு விடையாக 'எழுத்தாளர் ஒரு பேரினவாத நபர்' என்றொரு விடையும், 'எழுத்தாளர் வாழ்க்கையை மிக எளிதாகப் பார்க்கிறார்' என இரண்டாவது விடையாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விவகாரம் இந்தியா முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, “பாஜக அரசு குழந்தைகளுக்கு இதைத்தான் கற்றுத்தருகிறதா? பெண்கள் மீதான இந்த தாக்குதலைப் பாஜக ஆமோதிக்கிறது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.