Skip to main content

இன்னும் 20 கடிதம் கொடுத்தால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறுமா?.....பிரெக்சிட் கிளப்பிய பரபரப்பு

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
theresa  may


ஐரோப்பிய யூனியளிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து கடந்த 2016ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் 51.89 சதவீத மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 48.11 சதவீத மக்கள், அந்த முடிவுக்கு எதிராக வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதை’பிரெக்சிட்’ என்று அழைக்கப்பட்டது. யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் உடன்பாடில்லாத அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். இதனை அடுத்து தெரசா மே பதவி ஏற்றார். பிரிட்டன் விலகுவதற்கு, அந்த கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இப்போது அது தொடர்பாக 585 பக்கங்களைக் கொண்ட ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பற்றி மூன்று நாட்களுக்கு முன்  நாடாளுமன்றத்தில் 5 மணி நேரம் விவாதம் நடத்தி பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையின் ஒப்புதலை பெற்றார்.

 
இதனையடுத்து, பிரெக்சிட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய வம்சாவளியான அமைச்சர் சைலேஷ்வரா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து மேலும் மூன்று அமைச்சர்கள் பதவி விலகினார்கள். அடுத்தாண்டு மார்ச்சுக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வரைவு ஒப்பந்தம் திருப்தி அளிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரசா மே அமைச்சரவையிலிருந்து 4 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இது பிரதமர் தெரசா மேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அரசு மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த எம்பிக்கள் வலியுறுத்தி கடிதம் கொடுத்து வருகின்றனர். இதுவரை 28 கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவையில் 15 சதவீதம், அதாவது 48 எம்பிக்கள் கடிதம் கொடுக்கும் பட்சத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்படும். எனவே தெரசா மே அரசு மீது விரைவிலேயே நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இது குறித்து பிரதமர் தெரசா மே கூறியுள்ளது, ‘‘நமது சட்டம், எல்லைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், ஒற்றை சந்தையிலிருந்து வெளியேறவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விஷயங்கள் மீது இங்கிலாந்து மக்கள் கவலை கொண்டிருப்பதாலே, அவர்கள் வாக்களித்தபடி பிரக்சிட்டை நிறைவேற்ற உழைத்துக் கொண்டிருக்கிறோம். நான் என் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் சரியான விஷயத்தை செய்து கொண்டிருக்கிறேன். எனவே எந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் தயார்" என்றார். இந்த பிரெக்சிட் விவகாரம் பிரிட்டன் அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.