Skip to main content

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற இராணுவ தளபதி நரவனே!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

naravane

 

முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் அடுத்த முப்படை தலைமை தளபதியை நியமிக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி நரவனே பொறுப்பேற்றுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

முப்படை தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்படும் வரை, முப்படை தளபதிகளில் மூத்தவரே முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக செயல்பட்டுவந்தார். அப்பதவி உருவாக்கப்பட்ட பின்னர், முப்படை தலைமை தளபதியே முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக செயல்பட்டார்.

 

இந்நிலையில், முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத்தின் திடீர் மரணத்தையடுத்து, தற்போதைய முப்படை தளபதிகளில் மூத்தவரான இராணுவ தளபதி நரவனே அப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய முப்படை தலைமை தளபதி நியமிக்கப்படும்வரை, நரவனே முப்படை தளபதிகள் குழு தலைவராக செயல்படவுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்படும் பிபின் ராவத்தின் சிலை

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

statue former Tri-Army Commander Bipin Rawat sent from Puducherry Delhi

 

இந்தியாவின் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் நினைவைப் போற்றும் வகையில் 150 கிலோவில் ஐம்பொன் சிலை வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி புதுதில்லி ராணுவ தலைமையகத்தில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவர் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பணிகளையும், அவரது நினைவையும் போற்றும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஐம்பொன் உருவ சிலை ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நகருக்கு கொண்டுவரப்பட்டது. தெற்கு ரத வீதியில் வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. இந்த உருவச்சிலை புதுச்சேரியில் இருந்து ரயில் மூலமாக டெல்லிக்கு அனுப்பப்பட்டு, டிசம்பர் மாதம் பத்தாம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அனுமதியும் தற்போது கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே முதன்முறையாக ராணுவ வீரருக்காக உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலை எனவும் கூறப்படுகிறது.

 

 

 

Next Story

மறைந்த முப்படை தலைமை தளபதியின் சகோதரர் பாஜகவில் இணைந்தார்!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

bjp

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

 

இந்தநிலையில் அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரரும், ஓய்வுபெற்ற இராணுவ வீரருமான கர்னல் விஜய் ராவத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

 

பாஜகவில் இணைந்துள்ள விஜய் ராவத், அதுதொடர்பாக கூறுகையில், "எனது தந்தை ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் இருந்தார். இப்போது எனக்கு  வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கும் சிந்தனையும் மிகவும் புத்திசாலித்தனமானது மற்றும் எதிர்காலம் சார்ந்தது" என கூறியுள்ளார்.