/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (7)_0.jpg)
இந்தியாவில் கரோனாபரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஆந்திராவிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மக்கள் பொருட்கள் வாங்க, காலை 6 மணிமுதல் 12 மணிவரையும், அதன்பிறகு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், கரோனா பரவல் குறையாததால் ஊரடங்கை வருகிற 31ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ஆந்திர அரசு. மேலும் ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)