Skip to main content

மத்திய அரசின் 2035ஆம் ஆண்டிற்கான இலக்கை 2020இலயே தாண்டிய தமிழ்நாடு! 

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

ger tamilandu

 

மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் 2019 - 2020 ஆண்டிற்கான கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ (ஜி.இ.ஆர்) குறித்த தரவுகளும் வெளியாகியுள்ளன.

 

ஜி.இ.ஆர் என்பது 18-23 வயதுக்குட்பட்ட மாணவர்கள் எத்தனை பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளார்கள் என்பதைக் கணக்கிடுவதாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் ஜி.இ.ஆர் 2019 - 20ஆம் கல்வியாண்டில் 27.1 ஆக அதிகரித்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில் 26.3 ஆக இருந்தது. மேலும் உயர்கல்வியில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் சேருவது தெரியவந்துள்ளது. மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 26.9 ஆக உள்ள நிலையில், மாணவிகளின் மொத்த சேர்க்கை விகிதம் 27.3 ஆக உள்ளது.

 

தமிழ்நாட்டின் கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ 51.4% சதவீதமாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு இது 49 சதவீதமாக இருந்தது. கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ 51.4% என்பது தேசிய சராசரியைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் இலக்குகளில் ஒன்று, 2035 ஆம் ஆண்டிற்குள் கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோவை 50 சதவீதமாக அதிகரிப்பது. இந்நிலையில், தமிழ்நாடு அந்த இலக்கைத் தற்போதே தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.