Skip to main content

லாக்-அப் மரண வழக்கில் 2 போலீசாருக்கு தூக்கு!- 13 வருடங்கள் மகனின் நீதிக்காகப் போராடிய தாய் மகிழ்ச்சி..!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
lock up death


கேரளாவில் 13வருட சட்டப்போராட்டத்தை மேற்கொண்ட தாய் ஒருவர் தனது மகனின் மரணத்திற்கு நீதி பெற்றுள்ளார்.

திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி 67. இவரது மகன் உதயகுமார், (வயது 30). கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவில் உதயகுமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களை கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவு முழுவதும் போலீசார் தாக்கியதில் உதயகுமார் இறந்து போனார்.

 

 

இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு உதயகுமார் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உதயகுமார் சாவு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

சி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  2 poli


பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் அறவித்தார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. உதவி எஸ்.ஐ ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய மூவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமாரின் தாய் பிரபாவதி, நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. என் மகன் கொல்லப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய நீதி கிடைத்துள்ளது. இந்த 13 வருட போராட்டம் என்பது என் மகனுக்கானது. தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்துக்கு என் மனமார்ந்த நன்றி என கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"என் தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய திறமைகளை ஊக்குவிப்பேன்" - நடிகர் நித்தின் சத்யா அறிக்கை!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
bvdsgsd

 

 

வைபவ், வெங்கட் பிரபு மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்து, நித்தின் சத்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 'லாக்கப்' படம் ஜி5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதுகுறித்து நடிகர் நித்தின் சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"தமிழ் சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் வணக்கம்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் எனது தயாரிப்பில் உருவான 'லாக்கப்' திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றி. மேலும் இந்த படம் மக்களிடம் சேர உதவிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், திரைப்பட ஆர்வலர்கள் என எல்லோருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஒட்டுமொத்த லாக்கப் படக்குழுவுக்கும், என் இணை தயாரிப்பாளர் பிளேஸ் கண்ணுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் எல்லோருடைய அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் 'லாக்கப்' படம் உங்களிடம் நல்ல பெயர் பெற்றதற்கு முக்கியக் காரணம். டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் அவர்களுக்கும், ஆதரவு தந்த ஜீ5 தளத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

 

சினிமாவின் மீதான எனது ஆசை மிகப்பெரியது. திரைத்துறையில் பல விதமான வேலைகளில் நான் பணியாற்றி இருக்கிறேன். பதினைந்து வருடங்களுக்கும் மேலான இந்த பயணத்தில் பல விஷயங்களை கற்று இருக்கிறேன். இந்த துறை எனக்கு தந்த விஷயங்களுக்கு நான் நன்றி செய்ய இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன்.

 

எனது தயாரிப்பு நிறுவனமான ஸ்வேத்தின் இரண்டாவது வெளியீடான 'லாக்கப்' படத்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்குடன் கூடிய தரமான படங்களை தருவேன் என்றும், புதிய திறமைகளை  ஸ்வேத்தின் மூலமாக ஊக்குவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். 'லாக்கப்' திரைப்படத்தை பெரிய வெற்றி பெற செய்த அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.

 

என்றும் அன்புடன்,
நித்தின் சத்யா" என கூறியுள்ளார்.

 

Next Story

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் மர்ம மரணம்! - சென்னையில் பரபரப்பு!

Published on 18/05/2018 | Edited on 18/05/2018
dead in lock up


சென்னை காவல் நிலையத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்மமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செம்மஞ்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அந்தோனி (21). இவரை நீலாங்கரை போலீசார் நேற்று இரவு வழிப்பறி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்தோனியை கடுமையாக தாக்கி விடிய, விடிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் காவல்துறையினரின் துன்புறுத்தலை தாங்க முடியாத அந்தோனி மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவம் குறித்து அந்தோனி குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து ஆத்திரமடைந்த அந்தோனியின் குடும்பத்தினர் போலீசாரே அந்தோனியை அடித்து கொன்றுள்ளனர் என நீலாங்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து காவல்நிலையம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து கூடுதல் கமிஷ்னர் சாரங்கன் தலைமையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக, இதே காவல்நிலையத்தில் 3 வருடத்திற்கு முன்பு விசாரணைக்காக சிறுவன் ஒருவனை அழைத்து வந்த காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. இதேபோல் சமீபத்தில் உதவி ஆய்வாளர் இருவருக்கு இடையே மாமூல் பிறிப்பதில் தகராறு ஏற்பட்டதும் இதே காவல்நிலையம் தான். இப்படி தொடர்ச்சியாக நீலங்கரை காவல்நிலையம் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.