Skip to main content

கட்சிக்கொடி என்.ஜி.ஓ. போல் இருந்தால் என்ன தவறு? விளக்கும் கமல்ஹாசன்

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
​ kamal


திராவிடம் நாடு தழுவியது என சொல்லித்தான் எனது அரசியல் பயணமே தொடங்கியது. கிராமியமே தேசியம் என்றால் நாளை நமதே என்பதை நம்புகிறவன் நான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை நேற்று மதுரையில் வைத்து வெளியிட்டார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நான் திராவிடத்தையோ தேசியத்தையோ இழந்துவிடவில்லை. திராவிடம் நாடு தழுவியது என சொல்லித்தான் எனது அரசியல் பயணம் தொடங்கியது. கிராமியமே தேசியம் என்றால் நாளை நமதே என்பதை நம்புகிறவன் நான்.

நீங்கள் இடதா வலதா எனக் கேட்டால் நான் மையத்தில் இருப்பதாக சொல்வேன். கட்சிப் பெயரே அதைத் தெளிவாக உணர்த்துகிறது. சாதி, மத விளையாட்டுகளுக்கெல்லாம் நாங்கள் போவதாக இல்லை. கொள்கை என்னவென்று திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள். இத்தனை காலம் இங்கு எதையெல்லாம் செய்யத் தவறினார்களோ அதுவே எங்கள் கொள்கை. எதெல்லாம் சாதாரண மக்களுக்குக் கூட தெரிந்த கொள்கைகளோ, அதைத் தவிர்த்துவிட்டு புதியவற்றை வியாபாரத்திற்காகக் கொண்டு வந்து மக்களை ஏமாற்றினார்களோ அதெல்லாம் இல்லாததும், மக்களுக்குமானதுமாக இருக்கும் எங்கள் கொள்கை’ என தெரிவித்தார்.
 

kamal flag


கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட கட்சிக் கொடியில் ஆறு கைகள் இணைந்திருந்தன. வெள்ளை, சிவப்பு மற்றும் கறுப்பு உள்ளிட்ட நிறங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து விளக்கமளித்த நடிகர் கமல்ஹாசன், ‘சிவப்பு நிறம் உழைப்பையும், வெண்மை நிறம்  நேர்மையையும், கறுப்பு நிறம் திராவிடத்தையும் குறிக்கும். எட்டு முனை நட்சத்திரம் தென்னாட்டு மக்களைக் குறிக்கும். ஆறு கைகள் பாண்டிச்சேரி உட்பட ஆறு மாநிலங்களைக் குறிக்கும்’ என தெரிவித்தார். கமல்ஹாசனின் கட்சிக்கொடி என்.ஜி.ஓ. சாயலில் இருப்பதாக செய்தியாளர் ஒருவர் கூறியபோது, அப்படி இருப்பதில் தவறொன்றும் இல்லையே என கமல்ஹாசன் பேசிமுடித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் திரையிடப்பட்ட விக்ரம் ட்ரைலர்!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

k

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி  ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

 

இதற்கிடையே, 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் உலகின் உயரமான கட்டடத்தில் திரையிடப் படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது திரையிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ப்ரோமோவை ஒரு பிரம்மாண்ட மேடையில் வெளியிடப்போவதாகப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் பட புரோமோஷன் வேலைகள் வேறு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.