Skip to main content

காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

lovers incident at viluppuram

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் (20) அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் ராஜ்குமாரும் (23), கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ராஜ்குமார், அப்பெண்ணை அடிக்கடி வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்துள்ளார். பின்னர், அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜ்குமாரிடம் வலியுறுத்தியபோது அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். 'தனக்கு வேலை இல்லை, குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லை' என்று தட்டிக் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் காதலித்த அந்த இளம்பெண் மூன்று முறை கருவுற்றிருந்த போதும் ராஜ்குமார் அந்தப் பெண்ணுக்கு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவைக் கலைத்துள்ளார்.

 

தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் தன்னுடன் தனிமையில் இருப்பதற்கு மட்டுமே ராஜ்குமார் விரும்புகிறார். இதன் மூலம், தன்னை ஏமாற்றப் பார்க்கிறார் என்பதை அறிந்துகொண்ட அந்த இளம்பெண், கடந்த 2015ஆம் ஆண்டு மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜ்குமாரிடம் மன்றாடிக் கேட்டுள்ளார். அவர் அப்போதும் மறுக்கவே, இனியும் பொறுப்பதில் பயனில்லை என்று தனது பெற்றோரிடம் விவரத்தைக் கூறி அவர்கள் உதவியுடன் ராஜ்குமார் வீட்டிற்கு நியாயம் கேட்கச் சென்றுள்ளார். இளம்பெண்ணின் தந்தை ஜெயபால், தாய் யசோதா, அவரது சகோதரர் சதீஷ் குமார் ஆகியோரை, ராஜ்குமார் குடும்பத்தினர் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மீது அந்த இளம்பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்தனர் மகளிர் போலீசார். அது, சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

 

இவ்வழக்கை, விசாரித்த நீதிபதி சாந்தி, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், அந்த இளம்பெண்ணை ஏமாற்றிய ராஜ்குமாருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில்குமார் ஆஜராகி காதலித்த பெண்ணை ஏமாற்றிய ராஜ்குமாருக்கு தண்டனை கிடைக்க வாதாடியுள்ளார். காதலித்த பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.