EPS filed the nomination  for edappadi constituency

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல் வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கி மார்ச் 19ஆம் தேதி முடிவடையும். வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 22ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22 என்றும் அறிவித்திருந்தது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஆகியவற்றை முடித்து அக்கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனு தாக்கலைத் துவங்கியுள்ளனர்.

Advertisment

அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் இ.பி.எஸ். போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (15.03.2021) எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் இ.பி.எஸ். 7வது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment