Skip to main content

வீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்! - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

vaalaal vettappadum cake

 

‘நம்மள கண்டா ஊரே பயப்படணும்..’ என்ற வாசகத்துடன், வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸில், வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார், விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சிவலிங்கம். அந்த வீடியோவில், பொது இடத்தில், கல்லூரி நண்பர்கள் புடைசூழ, வாளால் கேக் வெட்டி, அவரது பிறந்த நாளைக் கொண்டாடிய காட்சி மிரட்டலாக இருந்தது.   


சென்னை சூளை மேட்டைச் சேர்ந்த ரவுடி பினு தான், அரிவாளால் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரத்தை துவக்கி வைத்தான். அப்போது, 75 ரவுடிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். அடுத்து, மதுரவாயலில், சட்டக் கல்லூரி மாணவர், இதே பாணியில் பிறந்தநாள் கொண்டாடி, கைது செய்யப்பட்டார். ஆனாலும், சட்ட நடவடிக்கைக்கு அஞ்சாமல், தமிழகம் முழுவதும் இதுபோன்ற அட்டூழியங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. 

 

vaalaal vettappadum cake

 

சரி, விருதுநகர் விவகாரத்து வருவோம்! ‘மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதையா.. வெட்டருவா விரலிருக்கும் சிங்கம் வருதையா..’ என்ற சினிமா பாடல் பின்னணியில் ஒலிக்க.. அந்த வீடியோ காட்சி பிறருக்கு சவால் விடும் வகையில் இருந்தது. சமூக வலைத்தளங்களில் இது வைரலாகப் பரவ, விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து, சிவலிங்கம் உள்ளிட்ட 7 கல்லூரி மாணவர்களைக் கைது செய்து, அரிவாள் மற்றும் செல்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ளனர். 


பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை சென்றும், பிறர் வாழ்த்தும் விதத்தில், மகிழ்ச்சியான சூழலில் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்ற சாதாரண விஷயத்தைக்கூட, கற்றுக் கொள்ளாத மாணவர்களாக, இத்தகையோர் இருப்பது கொடுமைதான்! 

 

இன்னொரு கொடுமையும் நடந்திருக்கிறது. விருதுநகர் விவேகானந்தர் தெருவில் மது அருந்திய இளைஞர்கள் அந்த வழியாகச் சென்ற சிறுவர்களைப் பிடித்து வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்யும் சி.சி.டி.வி காட்சி ஊருக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்த, விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார், சம்மந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர். 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.