Skip to main content

அடுத்த தேர்தலில் நீங்கள் ஒரு நல்ல கட்சிக்கு வாக்களிக்கலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் 

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

மதுரையில் சற்று முன்பு தனது கட்சியின் பெயரான 'மக்கள் நீதி மய்யம்' என்பதை அறிவித்து கொடியேற்றி வைத்தார் கமல். அதைத் தொடர்ந்து மாநில பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விழாவில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கமலையும் தமிழக மக்களையும் வாழ்த்திப் பேசினார்...   

 

Aravinth Kejriwal at Kamal party inaugration



"தமிழகத்துக்கு ஒரு புதிய மாற்றம் ஏற்படும் தருணத்தில் இங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். ஆனால், இன்று நான் இங்கு இருப்பதற்கு காரணம் அதுவல்ல, அவர் நிஜ நாயகன் என்பதே. அவர் நேர்மையானவர், தைரியமானவர். இந்த தேசத்தின் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கும் கமலின் தைரியம் எனக்குப் பிடித்தது. நான் அவரையும் அவரது அணியையும் வாழ்த்துகிறேன். அதற்கு முன் தமிழக மக்களை வாழ்த்துகிறேன். உங்களுக்கு ஒரு நேர்மையான,   நல்ல மாற்று கிடைத்திருக்கிறது. 

தமிழகத்தில் முக்கியமாக இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன, இரண்டும்  ஊழல்  கட்சிகள். இப்பொழுது உங்களுக்கு பெரிய வாய்ப்பு. அடுத்த தேர்தலில் நீங்கள் ஊழலில்லாத கட்சிக்கு வாக்களிக்கலாம். டெல்லியில் நாங்கள் ஒரு சிறிய கட்சி தொடங்கினோம். தொடங்கிய ஒரு ஆண்டிலேயே எழுபதுக்கு அறுபத்து ஏழு  இடங்களில் எங்களுக்கு வெற்றியை பரிசளித்தார்கள் டெல்லி மக்கள். காங்கிரசையும் பாஜகவையும் தூக்கி எறிந்தார்கள். தமிழக மக்கள் டெல்லி மக்களின் சாதனையை முறியடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

 

Aravinth at Makkal Needhi Maiam



டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு நேர்மையான அரசை நடத்துகிறோம். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், நேர்மையான அரசு இருந்தால் எதுவும் சாத்தியமே, எல்லாம் சாத்தியமே. இப்பொழுது டெல்லி அனைத்து துறைகளிலும் ஒரு முழுமையான மாற்றத்தை  கண்டுகொண்டிருக்கிறது. உங்களது உற்சாகத்தை பார்க்கையில் தமிழகமும் சீக்கிரம் மாற்றம் காணப்போகிறது என்பதை உணர்கிறேன்.

தமிழக மக்களே, உங்களுக்கு ஊழல் வேண்டுமென்றால், திமுக, அதிமுகவிற்கு வாக்களியுங்கள். உங்களுக்குப் பள்ளிகள் வேண்டுமென்றால் கமலுக்கு வாக்களியுங்கள். உங்களுக்கு ஊழல் வேண்டுமென்றால், திமுக, அதிமுகவிற்கு வாக்களியுங்கள், மருத்துவம், மின்சாரம் வேண்டுமென்றால் கமலுக்கு வாக்களியுங்கள். 

டெல்லி மக்கள் ஒரு புதிய பாதையை அமைத்தார்கள். இப்பொழுது உங்கள் முறை, தமிழகத்தில் ஒரு நேர்மையான அரசை அமைக்க உங்களுக்கான வாய்ப்பு. டெல்லி மக்கள் சாதனையை முறியடியுங்கள். வணக்கம்!!!"             

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.