Skip to main content

பயங்கரவாதத்தை ஒழித்த லட்சணம் இதுதானா, மோடிஜீ?

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

காங்கிரஸ் அரசுக்கு எதிரான மோடியின் கேள்விகள் அனைத்தும், விமர்சனங்கள் அனைத்தும் இப்போது அவருக்கே பூமராங் ஆக திரும்பிவரத் தொடங்கியுள்ளது.

 

2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது 56 இன்ச் மார்புகொண்ட மோடி பேசிய வீடியோ கிளிப் ஒன்றை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லை என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

 

Modi

 

அதாவது, 56 இன்ச் மார்பளவு கொண்ட மோடி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் என்றும், பயங்கரவாதிகளின் நிதி ஆதாரத்தை ஒழித்துவிடுவார் என்றும், எல்லையில் அமைதி நிலவும் என்றும் பில்டப் செய்யப்பட்டிருந்தது. 

 

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமீபத்தில் சுன்ஜுவான் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலோடு மொத்தம் 207 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று சிங்வி கூறியிருக்கிறார்.

 

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் வெறும் 96 மட்டுமே என்று உள்துறை அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

 


எல்லைப்பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறிவிட்டார் என்றுகூறி அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வளையல்களையும் புடவைகளையும் அனுப்பியது பாஜக. அதுபோலெல்லாம் காங்கிரஸ் கட்சி இதுவரை தரம்தாழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அதாவது, நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் அந்தக் கட்சி பொறுப்பாக இருப்பதையே இது காட்டுகிறது.

 

சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்தக் கேள்விகளுக்கு பாஜக பதில் சொல்லாது. ஏனென்றால், இந்தக் கேள்விகள் அனைத்தும் பாஜக கேட்டவைதான்.

 

முதல்கேள்வி, பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் எங்கிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கிடைக்கின்றன. எல்லைக்கு அந்தப்புறம் இருந்து கிடைக்கின்றனவா? அனைத்து எல்லைப் பகுதிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. பிறகு எப்படி அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கின்றன?

 

இரண்டாவது கேள்வி, பயங்கரவாதிகளுக்கு எப்படி நிதி கிடைக்கிறது. மொத்த பணபரிவர்த்தனை அதிகாரமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது. பிறகு ஏன் பிரதமர் மோடியால் தீவிரவாதிகளின் பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியவில்லை? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளின் நிதி ஆதாரத்தை அழித்துவிட்டதாக மோடி சொன்னது என்னாயிற்று?

 

அதாவது நாட்டின் எல்லைகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கடலோர பாதுகாப்பும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப் படையும், கடற்படையும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. பிறகு எப்படி பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவுகிறார்கள்?

 

பயங்கரவாதிகளின் போன்களையும், ஈமெயில்களையும் குறுக்கிட்டு உளவறியும் ஆற்றலை இந்த அரசு இழந்துவிட்டதா? என்றெல்லாம் கேட்டால், மவுனம்தான் விடையாக கிடைக்கிறது. பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது பாஜக. அதேசமயம், கேள்வி கேட்பவர்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுத்து, தன்னைத்தானே பெருமை பீற்றிக் கொள்கிறது என்று காங்கிரஸ் காட்டமாக பேசத் தொடங்கியிருக்கிறது.

 

தான் விதைத்த வினையை தானே அறுக்கும் நிலைக்கு பாஜக வந்திருக்கிறது.

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.