Skip to main content

உடம்பைப் பெற்றது தவறா?

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

Tamil poem about hathras uttarpradesh incident

 

எந்த மிருகம் எப்போது பாயும்
எதுவும் புரிய வில்லை -இங்கு
எவனுரு வத்தில் எங்கள் மரணம்
அதுவும் தெரிய வில்லை.


சொந்த  ஊரெனும் சுதந்திரம் கூட
எமக்குக் கிடைக்க வில்லை;
சுடரும் விழியில் பெருகும் நீரை
வாழ்க்கைத் துடைக்க வில்லை.


உடம்பெனும் ஒன்றைப் பெற்றது தவிர
வேறென்ன  தவறு செய்தோம்-அதில்
உயிரும் உணர்வும் தரித்தது தவிர
வேறென்ன தவறு செய்தோம்?


படிப்பதும்  பணிக்குச் செல்வதும் தவிர
வேறென்ன தவறு செய்தோம்?-உமை
நம்பிப் பிறந்து வளர்ந்தது தவிர
வேறென்ன தவறு செய்தோம்!


உடல்வெறி கொண்டு  உலவிடு வோரின்  
இதயம் தசையா இரும்பா?-அவர்
உயிரைக் கிழித்துச் சாறு பிழிய
எம்முடல் உணர்வறு கரும்பா?

 

Ad


அடங்கா ஆசை என்னும் பெயரில்
ஆவி பறிப்பதும் தகுமா?-இந்த
அவலம் தொடரின் எம்முளத் தீயிடம்
உலகின் சாம்பலும் மிகுமா?

 

 

 

 

சார்ந்த செய்திகள்