Skip to main content

துரை வையாபுரி டூ துரை வைகோ; பிசினஸ்மேன் பொலிடிசியன் ஆன கதை!

Published on 26/03/2024 | Edited on 27/03/2024
 The story of a businessman becoming a politician!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்து விட்டன. அந்த வகையில் திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக ஒரு மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் திமுக கூட்டணியில் பெற்றநிலையில், இம்முறை ஒரு எம்.பி தொகுதி மட்டுமே கிடைத்தது. இந்தமுறை காங்கிரஸ் வசமிருந்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி, மதிமுகவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழுமனதுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, தொகுதி ஒப்பந்தத்தில் போட்டியிட கையெழுத்திட்டார். 

இதையடுத்து, யார் திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடுவார்கள்? என்ற கேள்வி எழுந்த நிலையில், அக்கட்சியினர் வேட்பாளராக துரை வைகோ ஒருமனதாக களமிறங்கியுள்ளார். துரை வையாபுரியாக இருந்தவர், வாரிசு அரசியலை விரும்பாத வைகோவின் கட்சியிலே வேட்பாளராக வளர, பல தடைகளை கடந்து இந்த உச்சத்தை எட்டியுள்ளார் என்கின்றனர் அரசியல் விமர்சர்கள். வைகோ - ரோணுகாதேவி தம்பதியின் மகன் துரை வைகோ. கல்லூரி படிப்பு வரை துரை வையாபுரிக்கு அரசியலில் ஈர்ப்பு கிடையாது. கோவையில் கல்லூரி முடித்த பிறகும், அவர் தந்தையின் அரசியல் பாதையின் மீது அதிகம் ஈடுபாடு வாலிப பருவத்தில் இல்லாத காரணத்தால், தனியாக பிசினஸ் செய்து வந்தார். அதன்பிறகு, அரசியல் மீது ஈர்ப்பு ஏற்பட, ஒருபுறம் மதிமுக கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பது, மாநில நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பது என கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், கட்சி நிர்வாகிகளை தவிர பொதுவில் வெளிக்காட்டியது இல்லை.

பொடா வழக்கில் வைகோ கைதான சமயத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை கட்சி பணிகளை கவனித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு, கட்சித் தொடங்கிய வைகோ, தொண்டர்கள் மத்தியில் என் குடும்பத்தினர் அரசியலுக்கே வரமாட்டார்கள் என பேசிவந்தார். இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சியின் முக்கிய பொறுப்பிற்கு வராமலே, கட்சிக்காக பல பணிகளை செய்து வரும் துரை வையாபுரி கட்சியில் இணைய வேண்டும் என்றும், கட்சிப் பணியிலும் களப் பணியிலும் ஈடுபடுவரை தடுக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை பரிசீலனை செய்த வைகோ தொண்டர்களின் விருப்பத்தை உணராமல், கட்சிக்காக பணியாற்றும் ஒருவரை தடுக்கக் கூடாது என முடிவெடுத்தார். ஆனால், எளிதாக தனது மகனிற்கு பதவி கொடுக்க வைகோ விரும்பவில்லை. 

மதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தினார். அதில் 104 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் வாய்ப்பு வழங்க கூடாது என்றனர். இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வையாபுரி நியமிக்கப்பட்டார். மதிமுக கூட்டத்தில், இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் தியாக தழும்புகளை ஏற்று மிசா, தடா போன்ற அடக்குமுறை சட்டங்களை சந்தித்து குடும்ப சுகபோகங்களை மறந்து தமிழினம், தமிழ் மொழிக்காக அல்லும் பகலும் உழைத்து வரும் திராவிட இயக்கத்து போர்வாள் வைகோ அவர்களின் புதல்வர் துரை வைகோ அவர்களை உரிய இடத்தில் வைத்து மதிமுகவில் பணியாற்றிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் கட்சியில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பதவி வந்தபிறகும் விடாமல் துரை வையாபுரி முழுவீச்சில் கட்சிப்பணியிலும் களப்பணியிலும் ஈடுபட்டார். 

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். மதிமுக தொண்டர்களின் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், துக்க காரியங்கள் என அனைத்திலும் அவர் பங்கேற்றார். இதனிடையே குறுங்காடுகள் அமைப்பது போன்ற பணிகளையும் தேர்ந்தெடுத்து சூழலியல் ஆர்வலராகவும் துரை வையாபுரி வலம் வந்தார். இத்தனை பணிகளை செய்துதான் துரை வையாபுரி அரசியலில் துரை வைகோவாக மாறியதாக மதிமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில்தான், துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மகன் போட்டியிடுவது பற்றிய பேசிய வைகோ, ''தொண்டர்களை வசீகரிக்கக்கூடிய திறமை துரை வைகோவிற்கு இருக்கிறது. மனிதாபிமானம் இருக்கிறது. பொதுவாழ்வில் வெற்றிபெற தேவையான அனைத்து குணமும் அவருக்கு இருக்கிறது. எனவே துரை வைகோ வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது..'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

திருச்சி நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்களில் செல்வராஜ், அடைக்கலராஜ், குமார் மூவர் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட வைகோவின் மகன் துரை வைகோவும் வெற்றி பெறுவார் என மதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திமுகவைப் பொறுத்தவரை பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் மதிமுகவின் எல்.கணேசன் வெற்றிபெற்றிருப்பதால் அதை காரணமாக கூறி திருச்சி தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மதிமுக கேட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அரசியலில் முதன் முறையாக காலடி எடுத்து வைக்கும் துரை வைகோ பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்து பணிகளையும் அவரது கட்சியினர் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், மதிமுகவினர் தேர்தல் பணிகளில் அதிரடி காட்டத் தொடங்கியுள்ளனர்.

Next Story

வாக்கு எண்ணிக்கை; சத்யபிரதா சாகு முக்கிய ஆலோசனை! 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Counting of votes Satyapratha Sagu Important Advice

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில்  வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது சிசிடிவி கேமரா வசதிகள், 3 அடுக்கு பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார். 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.