Skip to main content

ஸ்டீபன் ஹாக்கிங் - காதலும் வாழ்வும்! 

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

'பிரபஞ்சத்தைக் கடவுள் படைக்கவில்லை. இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு அது சுயமாக உருவானது' இப்படி ஒரு கந்தகக் கருத்தை உதிர்த்து மானுடத்தின் புருவத்தையே திடுக்கிட வைத்த இயற்பியல் அரசன் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.

 

stephen and jane

ஹாக்கிங் - ஜேன்  

வானியல் விஞ்ஞானி கலிலியோ இறந்து 300வது ஆண்டான 1942, ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் டாக்டர்.பிராங்க் மற்றும் இசோபல் தம்பதிக்குப் பிறந்தார் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். ஸ்டீபன் 1950 முதல் 1953 வரை செயின்ட் அல்போன்ஸ் பள்ளியிலும் உயர் கல்வியை ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களிலும் படித்தார். பள்ளிக் காலங்களில் இவர் அந்த அளவு நுட்பம் கொண்டவர் கிடையாது. விளையாட்டுகளில் தனித்து நின்று வேடிக்கை பார்ப்பார், ஆனால் நகைச்சுவை பண்பாளர்.

தனது 21வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படிக்கட்டுகளில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டது தொடர் பரிசோதனையில், நரம்புகளின் குறைப்பாட்டால் தசைகள் ஊட்டம் பெறாமல் உடல் குறைவுறும் நோயான 'அமையோட்ரோபிக் லேட்டரால் ஸ்க்லரோசிஸ் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மோட்டார் நியூரான் என்னும் இந்நோய் குழந்தைகளையும், இளம் வயதினரையும் இலக்காக வைத்து தாக்கும் தன்மை கொண்டது. மூளையில் உள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல உடலுறுப்புகளை செயலிழக்கச்  செய்யும் தன்மை வாய்ந்தது. நரம்பு வழி மற்றும் உடலியக்கச் செயல்திறன் நாளடைவில் குறைந்து இறுதியில் செய்திகள் அனுப்பும் ஆற்றலை மூளை இழந்துவிடுகிறது. எனினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை சிந்தித்திடும் ஆற்றல் பழுதடைவது இல்லை. இந்நோய்த் தொற்றின் பிறகு ஹாக்கிங் வாழ்க்கை சக்கர நாற்காலியின் தயவில் சுழன்றாலும், இவருக்கான ஆய்வு உலகம் விரிந்துகொண்டே வந்தது. தன்னம்பிக்கையின் பற்றுதலைக் கைவிடாதவர் ஹாக்கிங். நோய்க்கே விருந்தோம்பல் வைத்து வெளியனுப்பும் வகையில் இயற்பியல், குவாண்டம், கருந்துளை ஆராய்ச்சிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

 

stephen mason

ஹாக்கிங் - எலைன்
 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மொழியியல் மாணவியான ஜேன் வைல்ட் என்பவரை 1965ல்  திருமணம் செய்துகொண்டார். இவரது நோயின் சுமைதாங்காமல் ஜேன், ஹாக்கிங்கிடமிருந்து பிரிந்தார். அதன் பிறகு தனக்கு பணிவிடை செய்ய வந்த செவிலியர் எலைன் மேசனை மணந்தார். லூசி, ராபர்ட், டிம் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதன் பின் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, மூச்சுக்குழல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின், தன் பேச்சுத்திறனையும் இழந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். அதன் பின் கணினி மூலம் பேசத்தொடங்கினார். ஆம் அவர் பேச  நினைப்பதை அந்த கணினி மூலம் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த கணினியை  டேவிட் மேசன் என்பவர் உருவாக்கினார். இதன் மூலம் ஹாக்கிங்  பல அறிவியல் கட்டுரைகள் மற்றும் உரையாடல்கள் நிகழ்த்தினார்.

2007 -2008 ஆம் ஆண்டுகளில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திலும், ஆப்பிரிக்காவிலும்  ஹாக்கிங்க்கு  சிலைகள் வைக்கப்பட்டன. ஹாக்கிங் இந்த மனித இனத்தை தன் அறிவாலும் அறிவியலாலும் பாதுகாத்து வந்தார். அந்த வகையில், 'எங்கே தண்ணீர் இருக்கிறதோ அங்கே உயிர்கள் இருக்கும்', மனிதனை விட அறிவில் சிறந்த உயிரினம் எப்போதாவது வரக்கூடும் என்றெல்லாம் கூறி எச்சரித்தும் தனது தொலைநோக்கு பார்வையை அகலப்படுத்தியும் வந்தார்.

stephen and pope



எடிங்க்டன் பதக்கம், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பதக்கம், உலக இயற்பியல் விருது என பல விருதுகளை ஹாக்கிங்கிற்கு வழங்கி, விஞ்ஞான பூமி தம்மை பெருமைப்படுத்திக்கொண்டது. ரோம் நாட்டில் கிறிஸ்துவ தலைமை சபையின் சார்பில் 'கடவுளும் பிரபஞ்சமும்' என்கின்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் ஸ்டீபன் கலந்துகொண்டார். உலக கத்தோலிக்க மதத்தலைவர் போப்பும் இதில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மதத்தலைவர்களும், விஞ்ஞானிகளும் தலைகுனிந்து வாழ்த்து பெற்றனர். ஆனால் போப்  ஹாக்கிங்கிடம் வந்து அவர் நெற்றியில் கை வைத்து ஆசிர்வதித்தார். ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை வரலாற்றை அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ 'தன்னம்பிக்கையின் நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங்' என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இந்நூலை மங்கை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

'நான் மரணத்திற்கு அவசரப்படவில்லை' என்ற ஸ்டீபன் தனது நெடுநாள் கனவாக இருந்த விண்வெளி ஆய்வுக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையையும் மரணத்தின் சிறகுகளால் தற்போது நிறைவேற்றிக் கொண்டார்.

    

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

குடும்பம் கைவிட்டதும் கலையை கையில் எடுத்தேன் - டிரெண்டிங் நடன பிரபலம் ஷர்மிளா உற்சாகம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 LETS DANCE SHARMILA interview

 

சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. 

 

அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன். 

 

 

நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள். 

 

பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது. 

 

என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.