Skip to main content

ரத யாத்திரையை திசை திருப்பவே பெரியார் சிலை மீண்டும் உடைக்கப்பட்டது - பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ரத யாத்திரை மற்றும், அதே சமயம் புதுக்கோட்டையில் நடந்த பெரியார் சிலை தாக்குதல்  பற்றி பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டி.


 

suba. veerapandian

  

இன்று தமிழ்நாட்டில் மதக்கலவரம் திட்டமிட்டு தூண்டப்படுகிறது. தமிழகத்தில் ரத யாத்திரை, தமிழகர்களின் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது அதை திசை திருப்ப பெரியார் சிலை தாக்கப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். இங்கு நடக்கின்றவை எல்லாம் தனித்தனியானவையும் அல்ல, தன்னிச்சையானவையும் அல்ல. எல்லாம் வஞ்சகத்தோடு, பின்னணி திட்டத்தோடு செயல்படுத்தப்பட்ட  சூழ்ச்சிகள் ஆகும்.
 

தமிழக்தில் ஒரு கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என பா.ஜ.க நினைப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தப் போக்கு இந்துக்கள் மற்றும் இந்துக்களை எதிர்ப்போர்கள் என மக்களை பிளவுபடுத்தி பிரிவினை செய்யவே நிகழ்த்தப்பட்ட நிகழ்வாகவே பார்க்கிறேன். இந்துக்களுக்கும் எங்களை போன்றவர்களுக்கும் எந்த பிரச்னையுமில்லை, கோடிக்கணக்கான இந்து மக்களை நாங்கள் நேசிக்கிறோம். ஆனால் இந்த நிகழ்வு மீண்டும் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் யுத்தத்திற்குதான்  வழிவகுக்கிறது.


ரத யாத்திரையை மிக நியாயமாக  சட்ட ரீதியாக வேண்டாம்  என்று மறுக்கக் காரணம் உள்ளது.  ராமர் கோவில் கட்டுவது பற்றிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, ராமர் கோவில் கட்ட ஆதரவு திரட்டுவது சட்ட அவமதிப்பு இல்லையா? அதை செய்யக்கூடாது என்று சொன்னால் அதை திசை திருப்பதான் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருகிறது. அப்படி செய்தால்தான், கலவரம் வெடிக்கும் தன்னிச்சையாக இளைஞர் போராட்டங்கள் வெடிக்கும் இதன் மூலம் அவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து விடலாம் என இவ்வளவு சூழ்ச்சிகளை பொதிந்துள்ளது பெரியார் சிலை உடைப்பு. 


பெரியார் சிலை உடைப்பதை பார்க்கும்போது  எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பெரியார் இறந்து 45 ஆண்டுகள் ஆன பின்னரும் அவரின் சிலை உருவத்தை பார்த்து அஞ்சும் கோழைகளை என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவ்வளவு வடிகட்டிய கோழைகளை எதிர்த்துதான் நாம்  அரசியல் செய்கிறோம் என்று நினைக்கையில்  வெட்கமும் வேதனையும் வருகிறது. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் எப்படியாவது விஷ விதையை விதைக்க நினைக்கிறது பாரதிய ஜனதா, கையாளாகாத ஆளுங்கட்சி இதற்கு துணைபோகிறது. எல்லாரும் போராட்ட களங்களை நோக்கி தள்ளப்படுகிறார்கள் இதுதான் உண்மை. எனவே ஆளுங்கட்சி, பாரதிய ஜனதா தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு சேர நிற்கவேண்டிய தருணம் இது எனக்கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.