Skip to main content

தாமரை தமிழகத்தில் கண்டிப்பாக மலரும்.... அதனால்தான் திமுகவினரும் தற்போது வேல் எடுத்துள்ளனர் - நடிகர் ராதாரவி பேச்சு!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

gh

 

சென்னையில் கராத்தே தியாகராஜன் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். வழக்கமான முறையில் பேசிய அவர், திமுகவை கடுமையாக சாடினார். அவர் பேசியது வருமாறு, "நீண்டநாட்களாக பாஜகவில் சேருமாறு அண்ணன் பொன்னார் அவர்கள் தொடர்ந்து என்னை அழைத்து வந்தார். நானும் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தேன். ஒரு கட்டத்தில் நானே பாஜகவில் சேர்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பேசுவதற்கு முன்பு இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் திமுக நண்பர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் அங்கே நின்றுகொண்டிருக்கும் அந்த நபர்கள் கடைசியாக வர வேண்டிய இடம் இதுதான். இதை விட்டால் அவர்களுக்கு வேறு வழி கிடையாது. முருகன் அவர்களை பாஜகவிற்கு அழைத்து வருவார். இந்த முருகன் பேரைத்தான் சீமான் தொடர்ந்து உச்சரித்து வருகிறார். அதனால்தான் எங்களுடைய தலைவர் பேரும் கூட முருகன் என்று இருக்கிறது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும், வந்து 10 நிமிடமாவது பேச வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் இரண்டு நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நான் வருகிறேன் என்று சொல்லியும், அண்ணா கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

 

நான் அவரைப் பற்றி 10 நிமிடத்தில் என்ன பேச முடியும். 10 நிமிடத்தில் பேசக் கூடிய ஆளா அவர். கராத்தே தியாகராஜன் மட்டும் இல்லை என்றால், நான் சட்டமன்ற உறுப்பினரே ஆகி இருக்க முடியாது. அம்மா அவர்கள் இருக்கும்போது நான் தேர்லில் போட்டியிட்டபோது ஒரு குறிப்பிட்ட வார்டில் மா.சுப்பிரமணியன் அவர்கள் பலமாக ஆளுமை செலுத்திக்கொண்டிருந்தார். அம்மா அந்த வார்டை சொல்லி, ‘அந்தப் பகுதியில் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது’ என்று கேட்டார். நான் மா.சுப்பிரமணியன் அங்கு பலமாக இருப்பதாக கூறினேன். அப்படியா என்று கேட்ட அம்மா, உடனடியாக அந்த பகுதிக்குக் கராத்தே தியாகராஜனை அனுப்பி வைத்தார். வேறு யாரும் அம்மா நினைவுக்கு வரவில்லை. உடனடியாக அவரை அந்தப் பகுதியில் தேர்தல் பணியைக் கவனிக்க போட்டார்கள். ஆனால் கராத்தே தியாகராஜனைப் பார்த்து என்னிடம் ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார், ‘இவரிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள்’ என்று. அவர் எவ்வளவு மோசமோ அதை போல நானும் மோசமானவன். இந்த மோசமும், மோசமும் ஒன்னா சேர்ந்தால்தானே உருப்பட முடியும். அவரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. அதற்கான காலம் இன்னும் இருக்கிறது. 

 

இன்றைக்கு தாமரை மலராது என்று தொடர்ந்து சிலர் பேசி வருகிறார்கள். தாமரை தமிழகத்தில் நிச்சயம் மலரும். குளத்தில் தண்ணீர் இல்லை என்றால் தாமரை இல்லை என்று அர்த்தம் இல்லை. தண்ணீர் வருகின்றபோது தாமரை மேலே தெரியும். எனவே தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. நமக்கு திமுகவைப் பற்றி பயப்பட தேவையில்லை. நம்முடைய வேலையைப் பாதி திமுக தலைவரே செய்து கொண்டுள்ளார். யானை சாணம் போட்டால் லத்தி என்று சொல்லுவோம், மாடு போட்டால் சாணம் என்று சொல்லுவோம். ஆடு போட்டால் புழுக்கை என்று சொல்லுவோம். சாணி போடுவதிலேயே இவ்வளவு இருக்கிறது. அண்ணா யானை மாதிரி திமுகவை வைத்திருந்தார், ஆனால் தற்போது நிலைமை அப்படியா இருக்கிறது. ஸ்டாலின் சொல்கிறார், ‘நாங்கள் பார்க்காத போலீசா’ என்று, நான் அவருக்குச் சொல்கிறேன், எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அதிகம் பேசினால் அவர்களும் தங்களுடைய வேலைகளைக் காட்டுவார்கள். உங்கள் அப்பாவிடம் போய் இதைப் பற்றி நீங்கள் கேட்க வேண்டும். எங்கள் தலைவர் வேல் எடுத்துக்கொண்டு சென்றதையடுத்து இன்றைக்கு வேலை இல்லாதவன் எல்லாம் வேல் எடுத்துக்கொண்டு மாவட்டம் மாவட்டமாக சுற்றுகிறார்கள். இவர்கள் எப்படி சுற்றினாலும் பாஜக தமிழகத்தில் கால் பதிப்பதைத் தடுக்க முடியாது" என்றார்.

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.