Skip to main content

யார் இந்த லிங்காயத்துகள்? இந்துத்துவா வீழ்கிறதா?  

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

இந்து என்பது மதமல்ல என்று பரவலாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்துமதமாக ஆக்கப்பட்டிருந்த லிங்காயத்துகளை தனி மதமாக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது.

 

basava lingayat

பசவா 

 

ஆங்கிலேயர்கள்தான் இந்துமதம் என்று ஒன்றை உருவாக்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுவதுண்டு. இந்து மதத்தை ஏற்காதவர்களும் அதை ஏற்றே ஆகவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சாதிகளை ஏற்காதவர்களும் சாதிகளை குறிப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

 

தமிழ்நாட்டில் பழங்காலத்தில் சைவ மதம் மட்டும் இருந்தது என்றும், சாதிகள் அப்போது கிடையாது என்றும் கூறப்படுகிறது. ஆரியர்கள் மூலமாக நுழைந்த வேதமதம்தான் மக்களை வர்ணங்களாகவும், சாதிப்பிரிவுகளாகவும் பிரித்து வைத்தது என்று கூறுகிறார்கள்.

 

இதே சிந்தனையில்தான் கர்நாடகத்தில் பசவா என்பவர் லிங்காயத்திஸம் என்ற பிரிவை உருவாக்கினார். அந்த பிரிவினர் தங்களுக்கென்று லிங்க வழிபாட்டை கடைப்பிடித்தார்கள். இந்து மதம் சொல்கிற சாதிகளை அவர்கள் ஏற்கவில்லை. மறுபிறவி, கர்மா என்கிற வினைப்பயன் ஆகியவற்றை அவர்கள் புறந்தள்ளினார்கள்.

 

lingayat

 

12 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த பிரிவு, 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் வலுப்பெற்றது. தங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் மாநாடுகளை கூட்டி கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை தற்போதைய முதல்வர் சித்தராமய்யா பரிசீலிப்பதாக கூறியிருந்தார். அதற்காக ஒரு நீதிபதி தலைமையில் குழுவை அமைத்தார். அந்தக் குழு லிங்காயத்துக்களின் கோரிக்கை சரிதான் என்று அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை ஏற்ற முதல்வர் சித்தராமய்யா, லிங்காயத்துகளை தனி மதமாக ஏற்க அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று அறிவித்தார்.

 

இதையடுத்து, தமிழ்நாட்டிலும், இத்தகைய கோரிக்கை எழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஏற்கெனவே, திருநெல்வேலி பகுதியில் சைவ மதம் என்று அறிவிக்கக் கோரி ஒரு பிரிவினர் முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

 

Siddaramaiah

 

ஆனால், முதல்வர் சித்தராமய்யாவின் முடிவை மத்திய அரசு எப்படிப் பார்க்கிறது என்பது இதுவரை தெரியவில்லை. இந்த முடிவை ஏற்றால் இந்து மதத்திலிருந்து பல குழுக்கள் தங்களை தனி மதமாக அறிவிக்கக் கோரும் நிலை வரலாம். கர்நாடக அரசின் முடிவை ஏற்க பாஜக அரசு மறுத்தால், கர்நாடகா தேர்தலில் பாஜக துடைத்தெறியப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முதல்வர் சித்தராமய்யாவின் இந்த முடிவு, இந்துத்துவா பேசுவோருக்கு மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது.  

 

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.