Skip to main content

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. தினகரன் பக்கம் மாறியது ஏன்? (EXCLUSIVE)

Published on 23/02/2018 | Edited on 23/02/2018


 

Prabhu T.T.V.Dinakaran

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு. இவர் இன்று காலை சென்னை ஆர்.கே.நகர் சுயேட்சை எம்எல்ஏவான டி.டி.வி. தினகரனை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. 
 

பிரபுவின் தகப்பனார் ஐய்யப்பா. தொடக்க காலத்தில் இருந்தே அதிமுகவில் உள்ளவர். இவர் தியாகதுருவம் அதிமுக ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் இருந்தார். பிரபுவின் தாயார் கைலம்மாள் ஒன்றிய துணை சேர்மனாக இருந்தார். பிரபு இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்தார். ஐயப்பா கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார், ஆனால் பிரபு பி.இ., பட்டதாரி என்பதால் அவருக்கு சீட் ஒதுக்கியது அதிமுக மேலிடம். எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் காமராஜை விட சுமார் 3 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார். 
 

Kumaraguru Ulundurpet AIADMK mlaஎடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சரான பின்னர் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், உளுந்தூர் பேட்டை எம்எல்ஏவான் குமரகுரு, மாவட்டத்தில் உள்ள தன்னைப்போன்ற எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரையும் மதிப்பதில்லை என்று பலரிடம் சொல்லி வந்துள்ளார். இந்த மனஸ்தாபம் எடப்பாடி வரை அவ்வப்போது சென்றது. அவரும், இருவருக்கிடையே பஞ்சாயத்து செய்து அனுப்பி வைப்பார். பிரபுவுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படாதது கட்சியில் அவரது வளர்ச்சியை குமரகுரு தடுப்பது, எம்எல்ஏ பதவியில் சுதந்திரமாக செயல்பட முடியாமல் தடுப்பது போன்றவற்றை அறிந்த தினகரன் தரப்பு பிரபுவை வளைத்தது. அதனைத் தொடர்ந்துதான் தினகரனை இன்று சந்தித்துள்ளார் பிரபு. இந்த சந்திப்பு எடப்பாடி பழனிசாமி அணிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினகரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த பிரபு செய்தியாளர்களிடம், மக்கள் ஆதரவு உள்ளதால் டிடிவி உடன் சேர்ந்தேன். டிடிவி தினகரனின் சேவை நாட்டுக்கு தேவை. மேலும் சில எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் அணிக்கு வருவார்கள். கள்ளக்குறிச்சியை தலைமையாக கொண்டு மாவட்டமாக அறிவிக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த முயற்சியில் எடுக்கவில்லை. மேலும் தொகுதி தேவைக்காக பலமுறை அமைச்சர்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் விரைவில் டிடிவி அணியில் உள்ள ஒருவர் முதல்வராவார் எனவும் தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பதிலளிக்க தேவையில்லை:சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சபாநாயகர் தனபால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டிஸில் மூன்று பேரும் ஒரு வாரத்திற்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.  

 

tn

 

அதனையடுத்து விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் இந்த நோட்டீஸுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

 

tn

 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம்  வழக்கறிஞர் மூலமாக மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் உச்சநீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பு எனக்கும் பொருந்தும் என நம்புகிறேன். அப்படி இந்த உத்தரவு எனக்கு பொருந்தாது என சட்டப்பேரவை கருதினால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

 

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கான கால அவகாசம் இன்றுடன்  முடிவடையும் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு உங்களுக்கும் பொருந்தும் எனவே கள்ளக்குறிச்சி  எம்.எல்.ஏ பிரபு இது தொடர்பாக பதிலளிக்க தேவையில்லை என  சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

நீதிமன்ற உத்தரவு எனக்கும் பொருந்தும்... இல்லையெனில் காலஅவகாசம் வேண்டும்...கள்ளிக்குறிச்சி எம்.எல்.ஏ மனு

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கடந்த 26 ஆம் தேதி சந்தித்து  கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் எனவே 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு  புகார் அளித்தனர்.  

 

அதனையடுத்து சபாநாயகர் தனபால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டிஸில் மூன்று பேரும் ஒரு வாரத்திற்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.  

 

kallakurichi mla

 

அதனையடுத்து விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் இந்த நோட்டீஸுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம்  வழக்கறிஞர் மூலமாக மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் உச்சநீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பு எனக்கும் பொருந்தும் என நம்புகிறேன். அப்படி இந்த உத்தரவு எனக்கு பொருந்தாது என சட்டப்பேரவை கருதினால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கான காலஅவகாசம் இன்றுடன்  முடிவடைவது குறிப்பிடத்தக்கது.