Skip to main content

மார்ச் 13 – திருவள்ளுவராண்டை உருவாக்கிய கா.நமச்சிவாயம்.

Published on 13/03/2018 | Edited on 13/03/2018


திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திமுக இனி நடத்தும் பொதுக்கூட்டங்களின் துண்டு பிரச்சுரம், வைக்கப்படும் பதாகைகளில் ஆங்கில தேதியோடு, தலைவர் கலைஞர் சட்டமாக்கிய திருவள்ளுவராண்டு என்கிற தேதியை குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த திருவள்ளுவராண்டுவை வகைப்படுத்தி திமு (திருவள்ளுவருக்கு முன்), திபி (திருவள்ளுவருக்கு பின்) என்பதை காலக்கணக்கிட்டு உருவாக்கி தந்தவர் தமிழறிஞர் கா.நமச்சிவயம் பிள்ளை. அதனைத்தான் கலைஞர் சட்டமாக்கினார், ஸ்டாலின், கட்சியினர் பொதுவெளியில் இதனை நடைமுறைப்படுத்தச்சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

சரி யார் இந்த நமச்சிவாயம் ?.

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த காவேரிப்பாக்கத்தில் வசித்து வந்த ராமசாமி – அகிலாண்டவள்ளி தம்பதியரின் மகனாக 1876 பிப்ரவரி 20ந்தேதி பிறந்தார் நமச்சிவாயம். இவர் தந்தை ராமசாமி திண்ணை பள்ளி வைத்து நடத்திவந்தார். அதில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் படித்துவந்தனர். நமச்சிவாயத்தில் தந்தையே அவருக்கு முதல் குருவானார். அதன்பின்பு சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த மகாவித்துவான் சண்முகம்பிள்ளையிடம், மாணக்காராக சேர்ந்தார். அவர் இவரை தன் மகன்போல் பாவித்து தமிழ் இலக்கணம், இலக்கியம் போன்ற அனைத்தையும் கற்று தந்தார்.

1895ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளர்க் வேலையில் சேர்ந்தார். அவருக்கு அந்த பணி சரிவரவில்லை. ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்துக்கொண்டு இருந்தார். அப்போது தண்டையார்பேட்டையில் இருந்த ஒரு பள்ளியில் பணிக்கிடைத்து அங்கு சேர்ந்தார். பணியில் சேர்ந்தபின்பும் கற்பதில் ஆர்வம் குறையாமல் கற்றுக்கொண்டே இருந்தார். 12 ஆண்டுகள் அவரிடம் பாடம் கற்றார். இதற்காக தினமும் தண்டையார்பேட்டையில் இருந்து சண்முகம்பிள்ளை வசித்த மயிலாப்பூர்க்கு நடந்தேவந்துள்ளார்.

இதனால் வேறு பள்ளிக்கு முயற்சித்துக்கொண்டு இருந்தார். சென்னையில் இருந்த செயின்ட் சேவியர் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்து அதில் சேர்ந்தார். அது தற்காலிக பணி தான். அதனால் மீண்டும் பள்ளி மாறினார். வேப்பேரியில் உள்ள புனித பால்ஸ் பள்ளியில் தமிழாசிரியராக பணிக்கு சேர்ந்தார். 1902 முதல் 1914வரை அங்கு பணியாற்றினார்.

அங்கு பணியாற்றும்போது தான் மாணவர்கள் படித்த பாடத்திட்டத்தை கவனித்தார். ஆங்கில பேராசிரியர்கள் தான் தமிழ்த்துறைக்கான இலக்கண, இலக்கிய நூல்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாட நூல்களை எழுதுவார்கள், அதனைத்தான் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, மாணவர்களை படிக்க வைத்தது. தமிழ் அறிஞர்கள் எழுதினால் தான் தமிழ் பாடத்திட்டம் முழுமையடையும், மற்ற துறையில் படித்தவர்களால் எப்படி மற்றொரு துறை பாடத்திட்டத்தை வடிவமைக்க முடியும் என நினைத்தார் நமச்சிவாயம். நினைத்ததோடு மட்டும்மல்லாமல் அவரே பாட நூலை எழுத துவங்கினார். 10 ஆம் வகுப்பு, இன்டர்மீடியட், இளங்களை பட்டபடிப்புக்கு தேவையான தமிழ் பாட நூல்களை எழுதி பாட தேர்வு குழுவுக்கு அனுப்பினார். இதனை ஆங்கிலேய அதிகாரிகள் சிலரின் ஆதரவுடன் தமிழ் பாட நூல்கள் எழுதிய ஆங்கிலேய பேராசிரியர்கள் சிலர் எதிர்த்தனர். ஆனால் அதனை பாடநூல் குழு எதிர்த்தது. பள்ளி, கல்லூரிகள் நமச்சிவாயத்தின் பாடநூல்களை வாங்கி பயன்படுத்த துவங்கின. பாடநூல் குழு அங்கீகரித்தது. அதன்பின்பே முதல்முறையாக தமிழ் பேராசிரியரால் எழுதப்பட்ட பாடநூல்களை முதன்முதலாக தமிழ்த்துறை மாணவர்கள் பயில துவங்கினர்.

1914ல் சென்னை கடற்கரையோரம் பெண்களுக்கென ராணிமேரிக்கல்லூரி தொடங்கப்பட்டது. பெண்கள் கல்லூரியா என தமிழ் பேராசிரியர்கள் பின்வாங்கிய நிலையில் நான் செல்கிறேன் என முன்வந்து சென்று தமிழ் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த சமயத்தில் சென்னை மாநிலக்கல்லூரிக்கு இவரை அழைத்துக்கொண்டு நிர்வாகம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம் போன்ற துறைகளை கழகமாக வைத்திருந்தது. அப்படியிருந்த தமிழ்க்கழகத்தின் தேர்வுத்துறை தலைவராக 1917ல் ஆங்கிலேய அரசாங்கம் நமச்சிவாயத்தை நியமித்தது. 1920ல் தமிழ் அரசுச்சங்கத்தின் தலைவர் பதவிக்கு சக உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். அவர் அந்த பதவிக்கு வந்தபோது, சமஸ்கிருதம் பயின்றவர்களுக்கே வித்வான் என்கிற அறிஞர் பட்டம் வழங்கப்பட்டு வந்தது. இதனை மாற்றி தமிழ் கற்றவர்களும் அறிஞர்கள் தான் அவர்களுக்கு தமிழ் வித்துவான் என்கிற பட்டம் வழங்கலாம் என உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு சமஸ்கிருத வித்வான்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். அதை நமச்சிவாயம் கண்டுக்கொள்ளவில்லை.

 

சக தமிழ்பண்டிதர்களான உ.வே.சா, மறைமலையடிகளாருடன் சேர்ந்து திருவள்ளுவர் ஆண்டு உருவாக காரணமாக அமைந்தவரும் இவர் தான். இவர் தான் திருவள்ளுவர் ஆண்டுக்கு முன், திருவள்ளுவர் ஆண்டுக்கு பின் என்கிற காலத்தை நிர்ணயித்து தமிழ் அரசுக்கழகத்தின் சார்பில் உத்தரவு வழங்கியவர். இவரது முயற்சிகளுக்கு ஊக்கம் தந்து, தமிழ் எதிரிகளிடம்மிருந்து நமச்சிவாயத்தின் முயற்சிகளை காப்பாற்றியவர்கள் பனகல்அரசர், பி.டி.ராஜன், ராஜாஅண்ணாமலை செட்டியார் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

தமிழ்க்கடல் என்கிற பெயரில் அச்சம் தொடங்கிய நமச்சிவாயம், தான் எழுதிய தணிகை புராணம், இறையனார் களவியல் உட்பட பல நூல்களை பதிப்பித்ததோடு நல்லாசிரியன் என்கிற பெயரில் இதழ் ஒன்றை 15 ஆண்டுகள் நடத்தினார். இதழ் நடத்தியதோடு வெளி இதழ்களுக்கும் தமிழ் பற்றிய கட்டுரைகளை எழுதி அனுப்பினார்.

1906ல் சுந்தரம் என்ற பெண்மணியை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். தீவிர முருகர் பக்தரான நமச்சிவாயம் தனது மூத்த மகனுக்கு தணிகைவேல் என்றும், இளையமகனுக்கு தணிகைமணி என்றும் பெயர்வைத்தார். 1936 மார்ச் 13ந்தேதி தனது 60வது வயதில் மறைந்தார் நமச்சிவாயம். நுங்கம்பாக்கத்தில் இவர் வாழ்ந்து மறைந்த பகுதிக்கு நமச்சிவாயபுரம் என்கிற பெயர் வைத்தனர். அந்த பெயரில் இப்போதும் ஒரு நகர் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.