Skip to main content

குறும்பட படைப்பாளிகளுக்கான பனிரெண்டாவது ஆசான் த்ரிஷ்யா விருதுகள் வழங்கும் விழா 2018

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

சென்னை ஆசான் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன்(Visual Communication) துறை சார்பாக பனிரெண்டாவது ஆசான் த்ரிஷ்யா விருது வழங்கும் விழா வரும் 24-ஆம்  தேதி சனிக்கிழமை  நடைபெறவுள்ளது.
கலையுலகத்தின் பின்னாள் படைப்பாளிகளான இளைஞர்களின்  எண்ணங்களையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆசான் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  விஷுவல் கம்யூனிகேசன் துறைசார்பாக இது  மாதிரியான விருதுவழங்கும் விழாக்களை  நடத்தப்படுகிறது . அதைத்தொடர்ந்து வரும் 24-ஆம் தேதி குறும்பட படைப்பாளர்களை ஊக்குவிக்கவுள்ளது. 

ASAN college

தலைமை விருந்தினராக திரைப்பட இயக்குனர் திரு.விஷ்ணு வர்தன் கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு விருதுகள் மற்றும்  பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்கவுள்ளார்.

இதற்கென எந்த பதிவு கட்டணமும் இல்லை. நேரடி பதிவு மட்டுமே போதுமானது. துறைசார்ந்த  பின்வரும் போட்டிகள் நடக்கவிருக்கிறது 

 1) Short Film
2) Animation Film
3) Documentary Film
4) Scene-Recreation

ஒவ்வொரு வகைக்கும் முதல் பரிசு ரூபாய் 20,000 மற்றும் இரண்டாம் பரிசு ரூபாய் 10,000

நேரம்:காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை
இடம்: அம்மு சுவாமிநாதன் அரங்கம், ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி ஸ்கூல்                                 கொச்சின் ஹவுஸ்,1, ஆண்டர்சன் ரோடு,சென்னை, தமிழ்நாடு-600006
             (Landmark: Behind Apollo Hospitals, Greams Road)  
தொடர்புக்கு:9600048517 / 9789807946 / 8608552271.

Next Story

சங்க இலக்கிய ஓவியப் போட்டிக்கான அறிவிப்பு வெளியீடு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Publication of notification for Sangam Literary Painting Competition

 

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்ப் பண்பாடு, இலக்கண இலக்கியங்கள் சார்ந்த முன்னெடுப்புகளையும் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சங்ககால மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் சங்க இலக்கியப் பாடல்களை ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நாட்காட்டியாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்குத் தேவைப்படும் ஓவியங்களுக்கு "சங்க இலக்கிய ஓவியப் போட்டியை" தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தவுள்ளது.

 

இப்போட்டியில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து கல்லூரி மாணவர்களும், ஓவியர்களும் www.tamllvu.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம். மாணவர்கள் பட்டியலிடப்பட்ட பாடல்களுள் தங்களுக்குப் பிடித்தமான பாடலைத் தேர்வு செய்து ஓவியமாக வரைந்து பத்து நாட்களுக்குள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அஞ்சலில் அனுப்ப வேண்டும். (ஒரு பாடலை 5 நபர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும்). இந்தப் போட்டிக்கான இணைப்பு 27-11-2023 வரை செயல்பாட்டில் இருக்கும்.

 

மேலும், வண்ண ஓவியத்தின் அசலை (Original) அஞ்சலிலோ அல்லது நேரிலோ இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை என்ற முகவரிக்கு உறையின் மேல் சங்க இலக்கிய ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு 09-12-2023 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்குத் தலா ரூ.2000  ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் அவற்றில் சிறந்த ஓவியங்களுக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் என மூன்று பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.9,000 வழங்கப்படும்.

 

Publication of notification for Sangam Literary Painting Competition

 

இப்போட்டிக்கான விதிமுறைகள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை - 25, என்ற  முகவரியிலோ, 044-2220 9400, +91 86678 22210 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, tpktva@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

கடலூரில் கலைத் திருவிழா; வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டிய எம்.எல்.ஏ 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Art festival in Cuddalore; MLA felicitated the successful students

 

கடலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை நடந்த விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பழனி தலைமை தாங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சங்கர், உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், வட்டாரக் கல்வி அலுவலர்கள் இளஞ்செழியன், புவனேஸ்வரி, கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி வரவேற்றார்.

 

தொடர்ந்து 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் என 3 பிரிவுகளாக கவின் கலை, நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

 

இதையடுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஐயப்பன் எம்எல்ஏ சிறந்த முறையில் கலை நிகழ்ச்சிகளை நடத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் தலைமை ஆசிரியர் எல்லப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் மணி, மேற்பார்வையாளர் மோகன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர் ) 21-ந் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

 

மேலும் கலைத் திருவிழா தனி போட்டிகளில் கலந்து கொண்டு அதிகப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும். இவ்விருதுகள் 3 பிரிவுகளில் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன் ஊக்கப்படுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.