Skip to main content

எதற்காக இத்தனை எதிர்ப்பு? அத்வானி ரதயாத்திரை - ஒரு ஃபிளாஷ்பேக்  

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

தங்க நிறத்தில் ஜோடிக்கப்பட்ட நவீன ரதத்தை சுற்றி காவிக் கொடிகள் பறக்க, 'ராமர் கோவிலை அயோத்தியில் எழுப்ப வேண்டும், ராமராஜ்யத்தை இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும்' போன்ற முழக்கங்களை முழங்கிக்கொண்டிருந்தது அந்த கூட்டம். அவர்களின் அட்டவணைப்படி, அயோத்தியில் ஆரம்பித்து ஆறு மாநிலங்கள் வழியாக வந்து, கடைசியில் கேரளாவிலிருந்து நெல்லை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்து, இராமேஸ்வரத்தில் அவர்களின் ரத யாத்திரையை முடித்துக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தனர்.

 

radhayathra



இவர்கள் தமிழக எல்லைக்குள் வருவதற்கு முன்பு ஐந்து மாநிலங்களை கடந்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கு  எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவே இல்லை. ஆனால் தமிழகத்துக்குள் நுழையப்போகும் நேரம் நெல்லையில் எதிர்ப்புகள் வலுவாகியது. நேற்று இரவில் இருந்து இந்த ரதயாத்திரையை எதிர்த்து, தடுக்கக் கிளம்பிய பல்வேறு கட்சித்  தலைவர்கள் திருமாவளவன், வேல்முருகன்,  ஜவாஹிருல்லா  போன்றவர்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், காவலர்கள் இவர்கள் வரும் வழிகளிலேயே மடக்கிப்பிடித்தனர். பிரச்சனைகள் வலுவாக கூடும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஐந்து நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார். எதற்காக இத்தனை எதிர்ப்பு? ஏற்கனவே நடந்த பாஜகவின் புகழ்பெற்ற ரதயாத்திரையைப் பற்றித் தெரிந்தால் இதற்கு விடை கிடைக்கும். 

ரத யாத்திரை என்பதை பாஜக ஒரு ஆயுதமாகத்தான் பயன்படுத்தியிருக்கிறது. இந்த ஆயுதத்தை வைத்துதான் பாஜக வளர்ந்தது. இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருந்தவர் எல்.கே.அத்வானி. சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு மேடையில் அத்வானியை மதிக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் அனுதாபத்தோடு பார்க்கப்பட்டார். இப்பொழுது அவர் மாணிக்கமாக இருக்கலாம், அப்பொழுது அவர் பாட்ஷா. 1990ஆம் ஆண்டில் பாஜக இந்தியாவில் வலுவாக ஒரு இடத்தை பிடிக்க அயோத்தியில் இராமர் கோவில் கட்டவேண்டும் என்கிற நோக்கத்தை மக்களிடத்தில் பரப்பியது. அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ராம் ரத யாத்திரை. விஸ்வ ஹிந்து பரிஷத் என்னும் அமைப்பால் தொடரப்பட்ட இந்த யாத்திரையை முன்னின்று நடத்தியவர் அத்வானி தான். சோம்நாத்தில் ஆரம்பித்து ஒரு நாளுக்கு முன்னூறு கிலோமீட்டர் என்று பயணித்தனர். அது அவர்களின் கொள்கையை பரப்ப ஒரு ஜாக் பாட்டாக அமைந்தது, அதிலும் அவர்களது கொள்கை ஹிந்து மக்களிடையே வெறியை விதைப்பதாய் இருந்தது. நாளுக்கு நாள் சூடாக, சமூக நல்லிணக்கத்துக்கு சவால்கள் விட்டுக்கொண்டே வந்தனர். ஆனால், தமிழகத்தில் அவர்களின் தாக்கம் துளி அளவும் இல்லை. வடக்கே அவர்கள் நினைத்ததைவிட அதிகமாகவே இருந்தது. 

 

Adhvani Radhayathra



பீஹார் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ், எங்கள் மாநிலத்துக்குள் மதக்கலவரங்களை கொண்டு வரும் இதுபோன்ற யாத்திரைகளுக்கு அனுமதியில்லை என்று எச்சரித்தார். இதைத்தான் அத்வானியும் எதிர்பார்த்தார், ஆனால் அவர் எதிர்பார்த்ததோ அயோத்தி இருக்கும் உத்திரபிரேதசத்தில். இது பீஹாரிலேயே நடந்துவிட்டது. உள்ளே நுழைந்த அத்வானியை கைது செய்தனர். கலவரமானது, இருந்தாலும் தொண்டர்கள் ரதத்தை அயோத்திக்கு கொண்டு செல்ல நினைத்தனர். உபியிலும் தடை பிறப்பிக்கப்பட்டது. பாஜக எதிர்பார்த்ததைப் போல், தொண்டர்கள் வெறிகொண்டு பாபர் மசூதியை இடிக்க கையில் ஆயுதங்களுடன் கிளம்பிவிட்டனர். பின்னர் அதைத் தடுக்க மூன்று நாட்கள்  பாதுகாப்பு போடப்பட்டது. இதன் மூலம் தான் பாஜக என்ற ஒரு கட்சி வடக்கில் வலுவான ஒரு கட்சியாக மாறியது. வி.பி.சிங் ஆட்சியை மாற்றியது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு சவால் விடத்தொடங்கியது. 1991 பார்லிமென்ட் தேர்தலில் இவர்கள் நடத்திய யாத்திரைக்கும், பல மனிதர்களை பலிகொடுத்ததற்கும் தேர்தல் முடிவுகளில் பலன் கிடைத்தது.  இவர்களின் முழக்கமான 'ராமர் கோவிலை கட்ட பாபர் மசூதியை இடிக்க வேண்டும்' என்பதையும்  நிகழ்த்தியது. 

 

Ayodhya

பாபர் மசூதி



இப்படிப்பட்ட நோக்கத்துடன் தான் அந்த ரத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. அது அவர்கள் எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது. வடக்கில் எப்படி வலுசேர்த்தார்களோ, அதே விஷயத்தைக்  கொண்டு தென்னிந்தியாவிலும் வளர்ந்துவிடலாம் என்று கணக்குப்  போடுகிறார்கள். இதுவரை இந்த யாத்திரையினால் எந்த கலவரமும் நடக்கவில்லை. ஆனாலும் எதிர்ப்பு ஏற்படுவதற்கு காரணம் இருக்கிறது. வெறுப்பு அரசியல் என்பது பாஜகவின் ஒரு ஆயுதம் என்பதை எச்.ராஜாவின் தொடர்ச்சியான ட்வீட்களிலும், பேச்சுகளிலும் தெரிந்துகொள்ளலாம். ஒரு ஆன்மீக யாத்திரைக்கு தேவையில்லாமல் எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்கின்றனர் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆன்மீகமும் அரசியலும் எப்பொழுதும் அருகருகே தான் இருந்திருக்கின்றன. ஆன்மீகமும் மதங்களும் வெறுப்பைத் தூண்டாமல் இருக்கும்வரை ஒன்றுமில்லை. ஆனால், பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை.   

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.