Skip to main content

போஸ்டர் போட்டு பொளக்குறோம்’’ -கடலூர் தி.மு.க. நிலவரம்!

Published on 20/03/2018 | Edited on 21/03/2018
கட்சிக்குள் நடக்கும் அனைத்து உள் குத்துகளுக்கும் முடிவு கட்டியே ஆக வேண்டும் என்பதற்காகத் தான் அண்ணா அறிவா லயத்தில் மாவட்ட வாரியாக கள ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறார் தி.மு.க.வின் செயல்தலைவரான மு.க.ஸ்டாலின். செயல்படாத, செயல்படவிடாத நிர்வாகிகள் மீது ஸ்டாலினிடம் நேரடியாகவும், அறிவாலயத்தி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

“வேறுபாடுகளை மறந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும்” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Minister MRK Panneerselvam said forget differences and work for elections

வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வெ. கணேசன் முன்னிலை வகித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், காட்டுமன்னார்கோயில் சிந்தனை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இள புகழேந்தி, துரை கி. சரவணன், முத்துக்குமார், கலைச்செல்வன், முன்னாள் எம்.பி. இளங்கோவன், காங்கிரஸ் கட்சி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திலகர், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ராமலிங்கம், பிச்சை, குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் துரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் செந்தில், நீதி வள்ளல், அறிவுடை நம்பி, திராவிட மணி,  மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மணிகண்டன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ரகுமான் ரப்பானி, மக்கள் நீதி மையம் விமல் ராஜ், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், கடலூர் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், வடலூர் நகராட்சித் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசுகையில், “திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்து தேர்தல் பணி ஆற்ற வேண்டும். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். 

இதனையடுத்து அமைச்சர் சி.வெ. கணேசன் பேசுகையில், “கடலூர், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய நாம் வேறுபாடுகள் மறந்து ஒரே குடும்பம் போல் கடுமையாக பாடுபட வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளான காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை போன்ற நல்ல திட்டங்களையும், ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சென்று கூறி வாக்கு கேட்க வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நம் முதல்வரின் திட்டங்களை பார்த்து அவர்கள் மாநிலத்தில் கொண்டு வரும் அளவிற்கு நல்லாட்சி செய்து வருகிறார். இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். வாக்குகள் மூன்று பிரிவாக பிரிந்து கிடக்கிறது. நாம் ஈசியாக ஜெயித்து விடலாம் என அலட்சியமாக இருக்கக் கூடாது. நாம் கடுமையாக உழைத்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

பட விளக்கம் - வடலூரில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். அருகில் அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்.

Next Story

எளிய மனிதரின் உயிரைக் காப்பாற்றிய அமைச்சர்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Minister Ganesan saved the life of a common man

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் உள்ள ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சங்கர்(50). திமுகவின் தீவிரமான தொண்டராக இருந்து வரும் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சங்கரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கரை மேல் சிகிச்சைக்காக வெளியூர் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத்  தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கும் அவருக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எங்கு சிகிச்சை பெறுவது என்று குழம்பிப் போயிருந்த சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விடுத்தாசலம் திமுக நகரச் செயலாளர் தண்டபாணி, நகர தலைவி சங்கவி முருகதாஸ் சங்கரை நேரில் சந்தித்து உடல் நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

இதையடுத்து, சங்கரின் உடல் நிலை குறித்து தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசனிடம் தொலைபேசியின் மூலம் தெரிவித்துள்ளனர். அனைத்தையும் கேட்டுகொண்ட அமைச்சர் சங்கரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வையுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் கூறியுள்ளார்.  அதன்பேரில் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னைக்கு சென்றனர். அவரிகளிடம் பேசிய அமைச்சர் கணேசன், தனது உதவியாளரை அழைத்து எந்த மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கலாம் என்று விசாரிக்க சொல்லியுள்ளார். அவரும் விசாரித்து ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிக்கிச்சை அளிக்க வேண்டும் என்று கூற, உடனடியாக அமைச்சர் கணேசன் மருத்துவமனை முதல்வரை போனில் அழைத்து சங்கரின் உடல்நிலை குறித்து கூறி அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சங்கர் குடும்பத்தோடு மருத்துவமனை செல்லும் போது  உயர் மருத்துவ அதிகாரி வந்து பார்த்துவிட்டு உடனே தீவிர சிகிச்சை பிரிவில் சங்கரை அனுமதித்து சிறப்பான முறையில் சிகிச்சை அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 18 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சங்கரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

“ஒரு எளிய கட்சி உறுப்பினரான எனக்கு சிறப்பாக கவனம் எடுத்துக் கொண்டு எனது உயிரை காப்பாற்ற உதவி செய்த அமைச்சரை நானும் என் குடும்பத்தினரும் என்றும் மறக்க மாட்டோம். வேறு எந்த மருத்துவமனைக்கு சென்று இருந்தாலும் இது போன்று சிறப்பான சிகிச்சை கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே? அமைச்சரால்  இன்று எனது உயிர் காப்பாற்றப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளேன். எனக்கு உதவி புரிந்த அமைச்சர் அவர்களுக்கும்.. விருத்தாச்சலம் நகர செயலாளர் தண்டபாணி மற்றும் நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் ஆகியோருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகள் என்று நம்மிடம் கூறிய சங்கர் மருத்துவமனையில் இருக்கும் போது சில கட்சியின் தோழர்கள் பலர் எனது உடல்நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்துள்ளனர். ஆனால் அப்போது எனக்கு நினைவு இல்லை என்பதால் அவர்கள் யார் யார் என்று கூட தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த கட்சி நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நானும் என் குடும்பத்தினரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிறார்கள் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர்.