Skip to main content

மனிதனைப் போலவே கைவீசி நடக்கும் கொரில்லா! - வைரலாகும் வீடியோ

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

கொரில்லா குரங்குகள் எப்போதாவது இரண்டு கால்களில் நடப்பதை சிலர் பார்த்திருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் உள்ள பிலாபெல்டியா வனவிலங்கு அருங்காட்சியகத்தில் இருக்கும் லூயிஸ் எனும் கொரில்லாவை எப்போதும் இரண்டு கால்களில் மனிதனைப் போலவே நடப்பதைப் பார்க்கமுடியும் என்கின்றனர் அருங்காட்சியக பாதுகாப்பாளர்கள். 

 

18 வயது நிரம்பிய இந்த லூயிஸ் கொரில்லா மேற்கத்திய லோலேண்ட் வகையைச் சேர்ந்தது. ஆறு அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்ட லூயிஸ் தன் கை நிறைய உணவுகளை வைத்திருந்தாலோ, நடக்கும் தரை சகதியாக இருந்தாலோ தன் இரண்டு காலில் நடக்குமாம். லூயிஸைக் காண அருங்காட்சியகத்திற்கு கூட்டம் அலைமோதுவதாகக் கூறும் ஊழியர்கள், அது இரண்டு கால்களில் நடக்கும் காட்சியையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி விட்டிருக்கின்றனர்.

 

 

இது முற்றிலும் பொய்.. யாரோ மாறுவேடத்தில் நடக்கிறார்கள் என்றும், நான் கூட கையில் சாப்பாடு வைத்திருந்தால் இப்படித்தான் நடப்பேன் என்றும் இந்த வீடியோவைப் பார்த்த சிலர் ஜாலியாக பதிவிட்டிருந்தனர். அதேசமயம், வேறுசிலரோ கொரிலாக்கள் நடப்பது நமக்கு ஆபத்து.. வெகுவிரைவில் நம்மை அழிக்க படையெடுக்கும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாதுகாவலரின் மடியிலேயே உயிரைவிட்ட பிரபலமான மனித குரங்கு!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Gorilla dead in the lap of the defender

 

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, கொரில்லா வகை குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆயுதம் ஏந்திய படையினரால் கொல்லப்பட்ட தன்னுடைய தாயின் உடலைவிட்டு நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்த நடாகாஷியை இரண்டு மாத குட்டியாக விருங்கா வனத்துறையினர் மீட்டு கொண்டு வந்தனர். அன்றைய பொழுதியில் இருந்து 14 வருடங்கள் நடாகாஷியை மேத்யூ ஷவாமு பராமரித்து வந்தார்.

 

காங்கோ நாட்டில் அமைந்துள்ள விருங்கா தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்ததது ஆதரவற்ற கொரில்லாவான நடாகாஷி  மற்றும் மடாபிஷி. இங்கு வனத்துறை ஊழியராக பணியாற்றும் மேத்யூ ஷவாமு, என்பவர் கொரில்லாக்கள் குட்டிகளாக இருக்கும்போதே அவற்றுடன் விதவிதமாக ‘செல்ஃபி’ எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மேத்யூ ஷவாமு அந்த கொரில்லாக்களுடன் எடுத்த ‘செல்ஃபி’ படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த படம் உலகம் முழுவதும் வேகமாக வைரலானது. எப்போதும் தன்னுடைய பாதுகாவலருடனே இருக்கும் நடாகாஷி தொடர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த கொரில்லா நடாகாஷி, தனது பாதுகாவலர் மேத்யூ ஷவாமு மடியிலேயே உயிரிழந்தது.

 

 


 

Next Story

ஹெலிகாப்டரில் பறந்த கொரில்லா... காரணம் இதுதான்!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020
jhk



கொரில்லா ஒன்றை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சை அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் விலங்கியல் பூங்கா அந்த நாட்டில் உள்ள பூங்காக்களிலேயே பெரிய அளவில் உள்ள பூங்கா ஆகும். பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் உடைய அந்த பூங்காவில் கொரில்லா ஒன்றுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் தும்பல் இருந்தது. அங்குள்ள விலங்கியல் மருந்துவர்கள் அதற்கு சிகிச்சை வழங்கியும் அது சரியாகவில்லை. 


இதனால் குழப்பமான மருத்துவர்கள் அதனை 64 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அங்குதான் 200 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட விலங்கினங்களை சிடி ஸ்கேன் செய்யும் இயந்திரம் உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டு, கொரில்லா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரில்லாவின் மூக்கில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 9ம் தேதி கொரில்லாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.