தாஜ்மஹால், குதுப் மினார் உள்ளிட்ட முகலாய கால நினைவுச் சின்னங்களை இந்துகோவில் என குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய விதமாக ஆண்டு காலெண்டர் ஒன்றை இந்து மகாசபை வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் பகுதியை சேர்ந்த இந்து மகாசபை சார்பில் இந்து ஆண்டு காலெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தாஜ்மஹாலை ’தேஜோ மகாலய ஆலயம்’ என்றும், மத்திய பிரதேசத்தில் உள்ள கமல் மௌலா மசூதியை ’போஜ்சாலா’ என்றும், காசியின் கியான்விப்பி மசூதியை ’விஸ்வநாத ஆலயம்’ என்றும் குதுப் மினாரை ’விஷ்ணு ஸ்ராம்’ என்றும் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை ’ராம் ஜன்மபூமி’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே கூறும்போது, இந்த நாட்டை ஒரு இந்து ராஷ்ட்ராவாக மாற்றுவதற்கு தீர்மானித்தோம். அதன்படி, மங்களகரமான புத்தாண்டு தினத்தன்று இந்து புத்தாண்டு காலண்டரை வைத்து சடங்குகளை செய்தோம் என்றார்.
மேலும், இந்தியாவை ’இந்து தேசமாக’ அறிவிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அனைத்து இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம், இது அடிப்படையற்ற தகவல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்பாடு என்றும் இதுபோல் இஸ்லாமிய வெறுப்பை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தாஜ்மஹால் இந்து கோவிலா? சர்ச்சையை கிளப்பிய இந்து மகாசபை காலெண்டர்!
சார்ந்த செய்திகள்
Next Story
ஆக்ரா பெயர் மாற்றம்; தாஜ்மஹாலில் தொல்லியல் துறை?
முகலாய மன்னர் ஷாஜகானால் தாஜ்மகால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில் ராஜா மான்சிங் அரண்மனையைத்தான் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார் என்பதை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு, கடந்த 3 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையேற்று நீதிமன்றம், இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு நகரத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு அங்குள்ள பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முகல் சாராய் என்ற இடத்தின் பெயரை தீன் தயாள் உபாத்யாயா நகர் என்று மாற்றப்பட்டது. அதே போல், அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என்றும், பைசாபாத் பெயரை அயோத்தி என்றும் மாற்றப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், அலிகார் என்ற இடத்தின் பெயரை இனிமேல் ஹரிகார் என்று மாற்றப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி அலிகார் நகர மேயர் பிரசாந்த் சிங்கால் தலைமையிலான கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆக்ராவை அக்ராவன் அல்லது அகர்வால் என்று மாற்றவும், முசாபர் நகர் என்ற இடத்தின் பெயரை லட்சுமி நகர் என்று மாற்றவும் உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Next Story
தாஜ்மகாலை ஷாஜகான் கட்டவில்லையா? - ஆய்வு செய்ய பரிசீலனை
தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினாரா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில் ராஜா மான்சிங் அரண்மனையைத்தான் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார் என்பதை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையேற்று நீதிமன்றம் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.