Skip to main content

ஒரே கழிவறை முன் ஏராளமானோரின் புகைப்படம்! தூய்மை இந்தியா பரிதாபங்கள்!!

Published on 20/02/2018 | Edited on 20/02/2018

ஒரே கழிவறையின் முன்பு மக்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை பஞ்சாயத்து நிர்வாகிகள் வாரிச்சுருட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

கோயம்புத்தூர் மாவட்டம் சூளூர் அருகே உள்ளது கே.மதப்பூர் கிராமம். இந்த கிராமத்தில் 2015 - 2016 காலகட்டத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 158 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ.12ஆயிரம் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

Kovai

 

ஆங்கில இதழ் ஒன்று சமீபத்தில் நடத்திய ஆய்வில், பயனாளர்கள் என்று சொல்லப்படும் யாருக்கும் கழிவறைகள் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 

 

புதிதாக கட்டப்பட்ட ஒருசில கழிவறைகள், முன்னரே கட்டப்பட்டிருந்த கழிவறைகள் என அனைத்திலும், தூய்மை இந்தியா என எழுதி அந்தப் பகுதி மக்களை அவற்றின் முன் நிறுத்தி புகைப்படங்களை எடுத்துள்ளனர். பக்கத்து கிராமத்திலிருந்து உறவினர்களின் வீடுகளுக்கு வந்தவர்களையும் நிறுத்தி புகைப்படம் எடுத்தது கொடுமையிலும், கொடுமை. இதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களே ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளன.

 

இந்த மோசடியின் மூலம் பஞ்சாயத்து நிர்வாகிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சில இடைத்தரகர்கள் என பலரும் பயனடைந்துள்ளனர்; பயனாளர்கள் விடுத்து. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் இந்த செய்தி குறித்து, விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உயரதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.