Skip to main content

அடுத்த கட்டத்திற்கு நகரும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

thalainagaram 2 shooting wrapped

 

கடந்த 2006ம் ஆண்டு சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் வெளியான படம் தலைநகரம். இப்படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சுந்தர் சி ரைட்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காமெடி ஆக்சன் கலந்து வெளியான இப்படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருப்பார். இப்படம் பெற்ற வெற்றியின் காரணமாக தற்போது தலைநகரம் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கிறார். வி. இசட் துரை இயக்கி வருகிறார். 

 

சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைநகரம் 2 படத்தின் அனைத்து படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட பணியை முழுவீச்சில் முடித்து, தலைநகரம் 2 படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்