Skip to main content

சூர்யா, கே.வி.ஆனந்த் கூட்டணியில் திடீர் மாற்றம்!

Published on 14/03/2018 | Edited on 16/03/2018
surkv


பொங்கலுக்கு வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின்  வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா அடுத்தாக கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்துக்கு கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, கலை இயக்குனராக கிரண் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'கனா கண்டேன்' படம் முதல் சமீபத்தில் வந்த 'கவண்' படம் வரை இயக்குனர் கே.வி.ஆனந்த் எழுத்தாளர் சுபாவுடன் கூட்டணி அமைத்து தன் படங்களுக்கு வசனங்கள் எழுதி வந்தார். தற்போது மாறாக தான் இயக்கப்போகும் புதிய படத்தில் பட்டுக்கோட்டை பிரபாகருடன், வசனத்தில் புதிய கூட்டணி அமைக்கவுள்ளார்.   
 

சார்ந்த செய்திகள்

Next Story

சூர்யா ரசிகர்களுக்கு விருந்து வைத்த காப்பான் படக்குழு!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

என்ஜிகே படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து வெளியாக இருக்கும் படம் ‘காப்பான்’. மாற்றான் படத்திற்கு பின் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் இது. மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். முதல் படம்‘அயன்’ஹிட்டை போல இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காப்பான் படத்தின் படபிடிப்பு முடிந்து ரிலீஸுக்கான வேலையில் உள்ளதால் இந்த படத்தின் மீத் பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். மே 31ஆம் தேதி என்.ஜி.கே வெளியான பின்பு வெகு விரைவில் காப்பான் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
 

kappan

 

 

காப்பான் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் காப்பான் படத்தின் அப்டேட் ஒன்று விரைவில் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். அதனை அடுத்து, என்னவாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குழம்பி தவித்தனர். காப்பான் படத்தின் டீஸர் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடுவார்கள் என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் வந்தது. 
 

இந்நிலையில், கே.வி. ஆனந்த் ட்விட்டர் பக்கத்தில் காப்பான் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காப்பான் படத்தின் டீஸர் இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் இருந்தது. மேலும் அதனுடன் ‘ ஆம் , நீங்கள் அனைவரும் நினைத்ததை போல காப்பான் படத்தின் டீஸர்தான் வெளியாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். 
 

 

 

காப்பான் படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாவலராக நடிப்பதாகவும் மோஹன் லால் பிரதமராக நடிப்பதாக முன்னமே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுடன் மோஹன் லால், ஆர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைகா தயாரிப்பு நிறுவனம் இதை தயாரித்து வருகிறது. 

 

 

Next Story

மோகன்லாலுக்காக படக்குழுவிற்கு சோறு போட்ட சூர்யா !

Published on 22/02/2019 | Edited on 22/02/2019
surya

 

 

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'காப்பான்' படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் நடிக்கும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்தததாக படக்குழு தற்போது அறிவித்துள்ளனர். மேலும் இதை கொண்டாடும் வகையில் சூர்யா படக்குழுவிற்கு பிரியாணி விருந்து அளித்தார். சூர்யாவுடன் இணைந்து ஆர்யா நடித்து வரும் இப்படத்தின் பாடல் காட்சி தற்போது படமாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். சாயிஷா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.