Skip to main content

மணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம்பு புலம்பல்  

Published on 26/02/2018 | Edited on 26/02/2018
sim


சிம்பு நடிப்பில் வெளிவந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் கடந்த வருடம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படம் தோல்வி அடைந்ததற்கு சிம்பு தான் காரணம் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் குற்றம்சாட்டினார்கள். பின்னர் நீண்ட நாட்கள் கழித்து, கடந்த வாரம் சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் போனில் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து வரும் வேளையில் இப்பிரச்சனை குறித்து விளக்கம் அளித்து பேசுகையில்...."நடிகர் சங்கத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு ஒரு நடிகனாக எனது பதிலை நடிகர் சங்கத்துக்கு தெரிவித்துவிட்டேன். இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையை நடிகர் சங்கம் எடுக்கலாம். ஆனால் அதை செய்யாமல் மணிரத்னம் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, தினமும் போன் செய்து தொல்லை கொடுக்கிறார்கள். சிம்புவை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று படத் தயாரிப்பாளருக்கு இடைஞ்சல் கொடுக்கிறார்கள். இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் உடன் பேசி அவர்களிடம் விளக்கிவிட்டேன். படம் ரிலீசாகி ஆறு மாதத்திற்கு பிறகு என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். அது யாருடைய தூண்டுதலின் பேரில் செய்தார்கள் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது தனிப்பட்ட பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதனை நடிகர் சங்கத்தில் தான் முறையிட வேண்டும். எனது பதிலை நான் நடிகர் சங்கத்திடம் தெரிவித்துவிட்டேன். தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் பிரகாஷ்ராஜிடமும் இதுகுறித்து நான் விளக்கிவிட்டேன்" என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

"டி.ராஜேந்தர் என் மீது தவறான குற்றச்சாட்டு வைக்கிறார்" - தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குமுறல்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
sgedga

 

நடிகர் சிம்பு நடித்து ஜனவரி 14 பொங்கலன்று வெளியாகும் “ஈஸ்வரன்” படத்தை தடை செய்ய, தேவையற்ற வேலைகளில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஈடுபடுவதாக இயக்குநர் டி. ராஜேந்தர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எதிரான தனது தரப்பு நியாயங்களை நேற்று மாலை பத்திர்க்கையாளர்களை சந்தித்த மைக்கேல் ராயப்பன் கூறியுள்ளார். அதில்... 

 

"ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தை எடுக்கும்போது ஒவ்வொரு தயாரிப்பாளரும் சந்திக்கும் பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் நானறிவேன். நடிகர் சிம்புவை வைத்து “அன்பானவன், அசராதவன், அடங்காதவன்” எனும் படத்தை எடுத்தேன் என்பதை அனைவரும் அறிவார்கள். படப்பிடிப்பின் போது அவர் ஒத்துழைக்காத காரணத்தால் எடுக்கப்பட்ட ஃபுட்டேஜ்களை மட்டும் வைத்து படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்படத்தை வெளியிடுவதால் ஏற்படும் பெரும் இழப்புகளுக்கு ஈடாக அவர் எனக்கு மற்றொரு படம் தருகிறேன் என கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நம்பிக்கையில் தான் அப்படம் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி படம் சம்பந்தமான அனைத்து விநியோக தளங்களிலும் அப்படம் கடும் இழப்பை சந்தித்தது. 

 

அப்போது நடிகர் விஷால் தலைமையில் செயலபட்டுகொண்டிருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினேன். இரு தரப்பிலும் முறையான விசாரணைகளை தயாரிப்பாளர் சங்க குழு செய்தது. சிலம்பரசனின் தாயார் உஷா ராஜேந்திரன் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடாக 7.2 கோடி ரூபாய் மூன்று பட ரிலீஸில் செலுத்தப்படும் எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். “அன்பானவன், அசராதவன், அடங்காதவன்” படத்திற்கு பிறகு வெளியாகும் மூன்று படத்தில் ஒவ்வொரு படத்தின் போதும் 2.4 கோடி செலுத்தப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. நடிகர் சிம்பு அந்நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்கள் வேறு விதிகளின் படி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அதனால் அவர் அடுத்ததாக ஒப்பந்தமாகும்  அடுத்த படத்திலிருந்து  இழப்பீட்டு தொகை தரப்படுமென  கூறப்பட்டது. 

 

அவர் அடுத்து ஒப்பந்தமாகிய முதல் படம் “ஈஸ்வரன்” ஆகும். இதனையொட்டி பத்து நாட்களுக்கு முன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை மற்றும் மதிப்பு குழுவை இந்த விசயத்தில் தலையிடுமாறு முறையிட்டேன். அந்த வகையில் டி.ராஜேந்தர் அவர்களுக்கு ஒப்பந்தம் ஞாபகப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் நான் எனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடை செய்வதாக குற்றம் சாட்டியதை கண்டு கடும் அதிர்ச்சியுற்றேன். இந்த விவாகரத்தில் எனக்காக இழப்பீட்டு தொகையை  தர வேண்டுமென நான்  அழுத்தமும் தரவில்லை. இது மிகவும் வெளிப்படையாக அறியப்பட்ட உண்மை. இப்படத்தில் பெரும் இழப்பை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கான இழப்பீட்டுக்காக மட்டுமே முறையிடப்பட்டது என்பதே உண்மை" என கூறியுள்ளார்.