Skip to main content

நடிகர் விவேக் நினைவாக உருவாகும் 'பீ ஹேப்பி' வனம்!

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

 park in memory of actor Vivek

 

விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது நினைவின் காரணமாக விவேக் வசித்துவந்த சென்னை பத்மாவதி நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு 'சின்ன கலைவாணர் சாலை' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் நினைவாக 'சிறுதுளி' அமைப்பு சார்பில் 'பீ ஹேப்பி' என்ற பெயரில் வனப் பூங்கா உருவாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த பூங்காவின் பூமி பூஜை நேற்று முன்தினம் பச்சாபாளையத்தில் நடந்த சிறுதுளி அமைப்பின் 19-ம் ஆண்டு விழாவில் நடைபெற்றது. 

 

'சிறுதுளி' அமைப்பு, மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாகக் கோவை பச்சாபாளையத்தில் எஸ்.பி.பி. வனம் என்ற பூங்காவை உருவாக்கியது. இதனை நடிகர் விவேக் தொடங்கிவைத்தார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களைத் தொடர்ந்து தற்போது மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கும் வனப் பூங்கா அமைக்கவுள்ளது 'சிறுதுளி' அமைப்பு.    

 

 


 

சார்ந்த செய்திகள்