ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் ரஜினி என டாப் சினிமா ஸ்டார்கள் இருவரும் சீரியஸ் அரசியல் பேசத் தொடங்கிவிட்டார்கள். கமல் கட்சி தொடக்கம், ரஜினி மன்ற நிர்வாகிகள் நியமனம் என அவர்கள் பரபரப்பாக இருக்க, இந்த சீரியஸ் ட்ரெண்ட் போர் அடித்ததோ என்னவோ, அடுத்த டாப் ஸ்டார்களில் ஒருவரான அஜித்தின் ரசிகர்கள் திடீரென நேற்று ட்விட்டரில் ஒரு புதிய ஹேஷ்டேக் (hashtag)கை உருவாக்கி உலக அளவில் ட்ரெண்டாக்கினர். '#ROARING VISWASAM DIWALI2018' என்ற அந்த ஹேஷ்டேக், அஜித் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவருவதாகச் சொல்லப்படும் 'விஸ்வாசம்' திரைப்படத்தை வரவேற்பதாக அமைக்கப்பட்டுள்ளது. 'விஸ்வாசம்' திரைப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைப்பதாக சமீபத்தில் தான் உறுதியானது.
இந்த ட்ரெண்டுடன் நடிகர் அஜித் சமீபத்தில் நடந்த ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களும் சேர்ந்து கொள்ள, அவரது ரசிகர்கள் இன்னும் குஷியாகினர். வெளியான புகைப்படங்களில், மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா, தாய் மோகினி என குடும்பத்துடன் இருக்கிறார் அஜித். 'விஸ்வாசம்' படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திலிருந்து மாறி, பழைய தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தப் படங்களில் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருக்கிறார் அஜித். எனவே புதிய படத்தில் அஜித்தின் தோற்றம் பற்றிய கேள்விகள் அவரது ரசிகர்களுக்கு எழுந்துள்ளன.
முன்பெல்லாம், தங்கள் விருப்ப நாயகனுக்கு ரசிகர் மன்ற பலகைகள் வைக்கும்பொழுது, போட்டி நாயகனின் மன்றத்தை விட பெரிதாக வைக்க வேண்டுமென்ற போட்டியிருக்கும். இப்பொழுது போட்டியெல்லாம் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் யூ-ட்யூப் எண்ணிக்கையிலும் என சமூக ஊடகங்களில் தான். போர் அடித்தால் ஹேஷ்டேக் போட்டு கெளம்பி விடுகிறார்கள். நாளை விஜய் ரசிகர்கள் என்ன செய்கிறார்களோ, பார்ப்போம்.
வெளியான புகைப்படங்கள்... ட்ரெண்டான விஸ்வாசம்! #ROARING VISWASAM DIWALI2018
சார்ந்த செய்திகள்
Next Story
வீடு திரும்பினார் அஜித்
அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Next Story
'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்
அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.