Skip to main content

கில்கிறிஸ்ட்... இவரு... அப்பறம் யாருமில்ல - ரிஷப் பந்தின் புதிய சாதனை!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

rishabh pant

 

இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (04.03.2021) தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி, இந்தப் போட்டியை வெல்லவோ, ட்ரா செய்யவோ வேண்டும். இதனால், இந்தப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இதற்குப் பிறகு, ஆடிய இந்திய அணி தடுமாறினாலும் ரோகித், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி முன்னிலை பெற்றது. முதலில் பொறுமையாக ஆடி, பிறகு அதிரடி காட்டிய ரிஷப் பந்த் சதமடித்தார். பந்த் 118 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். இந்தியாவில் இது பந்த்தின் முதல் சதமாகும்.

 

இதன்மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளார் ரிஷப் பந்த். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலும் சதமடித்திருந்த பந்த், இன்றைய சதம் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் சதமடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு கில்கிறிஸ்ட் மட்டுமே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.