Skip to main content

மாடு - பன்றி இறைச்சி சாப்பிட இந்திய வீரர்களுக்கு தடை!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

team india

 

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே, உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்நிலையில் தற்போது, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை சாப்பிட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்திய வீரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உணவுமுறை திட்டத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹலால் இறைச்சியை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என வீரர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வீரர்களை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும், தேவையற்ற உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.