Skip to main content

சரித்திரப் புகழ் பெற்ற சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசுக் காட்சி..! 

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Worship took place without devotees. Historically famous Sankara Narayana Swamy temple adicapasuk scene ..!


பண்டைய காலங்களில் சைவம் பெரிதா? வைணவம் பெரிதா? என இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட ஈகோ மோதல் காரணமாக பலர் மோதிக் கொண்டனர். வெட்டியும் குத்தியும் உயிர்கள் பலியாயின. இதைக் கண்டு பதறிய தேவாதி தேவர்கள் ஈசனிடம் சென்று மோதலைத் தவிர்த்துப் பக்தர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று முறையிட்டார்கள். அதனை ஏற்ற ஈசனும் பக்தர்களைச் சமாதானம் செய்யும் பொருட்டு தன் உடலின் ஒரு பகுதியை அரியாகவும் மற்றொரு பகுதியை சிவனாகவும் ஒரு சேர உருவெடுத்த சர்வேஸ்வரன் பூலோகம் வந்தார். சைவமும் வைணவமும் வெவ்வேறு அல்ல. அனைத்தும் ஒன்று. என்று அவர்களைச் சமாதானப் படுத்தினார். அரியும் சிவனுமாக காட்சிக்கொடுத்த சர்வேஸ்வரனின் அரிய காட்சியினை பக்தர்கள் தரிசித்தனர். அன்றிலிருந்து இரண்டு தரப்பினரும் சமாதானமடைந்து அவர்களுக்குள் அமைதி நிலவியது. ஈசன் திருக்காட்சியளித்த இந்த வைபவம் புராணமானது.

 

Worship took place without devotees. Historically famous Sankara Narayana Swamy temple adicapasuk scene ..!

 

பக்தர்களுக்கு காட்சியளித்த சிவபெருமானின் இந்த அரிய காட்சியினைத் தானும் தரிசனம் செய்கிற பாக்யம் வேண்டுமென்று ஈசனிடம் பார்வதி தேவியார் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த அரிய காட்சியை காணவேண்டுமாயின் பூலோகத்தில் உள்ள பொதிகை அடியில் எம்மை நினைத்து தவம் செய்தால், தாம் அவ்வாறே காட்சி அளிப்பதாக ஈசன் தெரிவிக்க அவரின் ஆக்ஞைபடி பார்வதி தேவியாரும் பொதிகையடியில் சர்வேஸ்வரனை நினைத்துக் கடும் தவம் புரிந்தார். அம்மையின் தவத்தை மெச்சிய சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தது போன்று, ஈசனும் திருமாலும் சேர்ந்த கோலத்தில் சங்கர நாராயணராக உருவெடுத்து அம்மைக்குக் காட்சியளித்தார். இந்த அரிய காட்சி ஆடிமாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று நடந்தேறியது. பார்வதி தேவியார் ஈசனின் அரிய அவதாரத்தை தரிசித்த பொதிகை அடி தான் சங்கர நாராயணர் கோவில் என்ற தலமானது.

 

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த உக்கிரபாண்டிய மன்னர், சிறந்த சிவ பக்தர். தன் கனவில் ஈசன் தோன்றியதன் காரணமாக அவர் சங்கரநாராயண ஆலயம் என்றும் திருக்கோவிலைக் கட்டினார். அது தான் தற்போது தென்காசி மாவட்டத்தின் கோவில் நகரமான சங்கரன்கோவில் ஆனது. சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் இத்தலத்தில் ஈசனும் திருமாலும் சேர்ந்த கோலத்தில் சங்கர நாராயணராக அருட்கோலம் காட்டிய அரிய தலமானது. ஈசனைக் காண தவக்கோலத்தோடு தேவி புறப்பட்டு வரும் வைபவத்தையே ஆடித்தபசு என்று வழி வழியாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். இத்திருக்காட்சியைத் தரிசிக்க அன்றைய தினம், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவது வழக்கம். பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு மண்டகப்படிதாரரும் கோமதி அம்பாளின் தவக்கோலத்தை சிறப்பு அலங்காரத்தில் வைத்து வீதி உலா வந்து கொண்டாடுவது நடைமுறை. 

 

Worship took place without devotees. Historically famous Sankara Narayana Swamy temple adicapasuk scene ..!

 

தற்போது கரோனா காரணமாக ஊரடங்கு என்பதால் கடந்த வருடமும் இந்த வருடமும் ஆடித்தபசுக் காட்சி ரத வீதிகளில் நடத்தப்படாமல் பக்தர்களின்றி ஆலயத்தின் உள்ளேயே நடத்தப்பட்டது. அதே போன்று இந்த வருடமும் நேற்றைய தினம் பக்தர்களின்றி அனைத்து மண்டகப்படிதாரர்களின் குறிப்பிட்ட அங்கத்தினர் மட்டுமே பங்கேற்கும் வகையில் அனுமதிக்கப்பட்டு நடந்தது. மாலை 6 மணியளவில் தவக்கோலத்தில் எழுந்தருளிய அம்பாளுக்கு ஈசன் சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அது சமயம் குறிப்பிட்டவர்களே பங்கேற்கும்படி அனுமதிக்கப்பட்டனர். அதே போன்று இரவு சங்கர லிங்கமாக அம்பாளுக்கு ஈசன் காட்சி கொடுக்கும் வைபவமும் நடந்தேறியது. புகழ் பெற்ற லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்கிற சங்கரன் கோவிலின் ஆடித்தபசுக் காட்சி கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றியே நடந்தேறியிருக்கிறது.

 

ஆலயத்தினுள்ளேயே நடந்த இந்த ஆடித்தபசு காட்சியின் பாதுகாப்பு பணியில் தென்மண்டல ஐ.ஜி.யான அன்பு தலைமையிலான, தென்காசி எஸ்.பி. கிருஷ்ண ராஜ் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.