Skip to main content

கடவுள் சொன்னால் போட்டியிடுவேன்! - அதிபர் தேர்தல் குறித்து ஓப்ரா வின்ஃப்ரே

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

கடவுள் சொன்னால் அமெரிக்க அதிபர் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என அமெரிக்க நடிகை ஓப்ரா வின்ஃப்ரே தெரிவித்துள்ளார்.

 

Ophra

 

உலகின் வலிமைவாய்ந்த பெண்களில் ஒருவர் எனப் புகழப்பட்டவர் நடிகை ஓப்ரா வின்ஃப்ரே. 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் போட்டியிடுவார் என இப்போதே பேச்சுகள் அடிபடுகின்றன. ஓப்ராவிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் பலரும் கூட இதை உறுதி செய்துள்ள நிலையில், திட்டவட்டமாக அவர் மறுத்துவருகிறார்.  

 

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஓப்ரா வின்ஃப்ரே, ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை. எனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு செலவு செய்ய பல செல்வந்தர்கள் முன்வரத் தயாராக இருக்கும் நிலையில், இப்போது வரை எனக்கு அப்படியொரு ஆசையேயி இல்லை. என் டி.என்.ஏ. அமெரிக்க அதிபருக்கானது அல்ல’ என தெரிவித்தார்.

 

மீண்டும் மீண்டும் தேர்தல் குறித்தே அழுத்தமாக கேட்டபோது, ‘தேர்தலில் போட்டியிடுவது பற்றி எனக்குத் தெரியாதா? அப்படி ஒன்று தேவையென்றால் கடவுள் என்னிடம் சொல்லியிருப்பார் அல்லவா? அப்படி சொன்னால் போட்டியிடுவேன்’ என பதில் சொல்லி பேட்டியெடுத்தவரின் வாயை அடைத்திருக்கிறார்.

 

கடவுள் சொன்னால் அரசியலில் குதிப்பேன் என இங்கும் ஒருவர் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். ஒருவேளை இதுவும் ஆன்மீக அரசியலாக இருக்குமோ?

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா வருகிறாரா அமெரிக்க அதிபர்? - வெள்ளை மாளிகை தகவல்!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

US President coming to India White House Information

 

ஜி20ன் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அந்த வகையில் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளார். இந்த பயணத்தின் போது 8 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

 

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதேநேரம் தனக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

 

US President coming to India White House Information

 

ஜில் பைடன் கொரோனா தொற்று காரணமாக அதிபர் ஜோ பைடன் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வருவது சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் முதல் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தன. இதையடுத்து 2 வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

செப்டம்பர் 7 இல் அமெரிக்க அதிபர் இந்தியா வருகை

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

US President's visit to India on September 8

 

ஜி20ன் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்நிலையில் ஜி - 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளார். இந்த பயணத்தின் போது 8 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

 

முன்னதாக டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங்க் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போன்று உக்ரைனில் மனித உரிமை மீறல் தொடர்பாக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதன் காரணமாக ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.