Skip to main content

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம்; பதவி விலகிய ராஜபக்சே

Published on 15/12/2018 | Edited on 15/12/2018

 

ran

 

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து கடந்த அக்டோபர் 26ம் தேதி சிறிசேனா  நீக்கினார். அதற்கு பதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.ஆனால் 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு 95 எம்.பிக்கள் மட்டுமே ஆதரவாக இருந்ததால் அவர் மீது ரணில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற முடியவில்லை. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். ஆனால், தேர்தல் நடத்தவும், ராஜபக்சே பிரதமராக செயல்படவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நேற்று அதிபர் சிறிசேன வெளியிட்ட குறிப்பில் ரணிலை தவிர வேறு ஒருவரைத்தான் பிரதமராக தேர்ந்தெடுப்பேன் என கூறியிருந்தார். இந்நிலையில் ராஜபக்சே இன்று தனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் கொடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்