Skip to main content

மலேசியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

ismail sabri yaakob

 

மலேசியா நாட்டில் நடைபெற்று வந்த கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட விரிசலால் முஹ்யித்தீன் யாசின் தலைமையிலான புதிய கூட்டணி அரசு அமைந்தது. அதன்பிறகு இந்த அரசு கரோனாவை சரியாகக் கையாளவில்லை எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

 

இதற்கிடையே கூட்டணிக் கட்சியான யூஎம்என்ஓ, ஊழல் புகார்கள் சம்மந்தமான விவகாரத்தால் அரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் தலைமையிலான அரசு பெருமான்மையை இழந்தது. இதனையடுத்து முஹ்யித்தீன் யாசினும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் தங்களது பதவியை இராஜினாமா செய்தனர்.

 

இதனையடுத்து பிற அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்குமா அல்லது தேர்தல் நடைபெறுமா எனச் சந்தேகம் ஏற்பட்டது. இந்தநிலையில் யூஎம்என்ஓ கட்சியை சேர்ந்த இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 114 பேர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பிற்கு ஆதரவு அளித்தனர். 

 

இதனையடுத்து நேற்று மலேசியா மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா, இஸ்மாயில் சப்ரி யாகோப்பை புதிய பிரதமராக நியமித்தார். இதனையடுத்து இஸ்மாயில் சப்ரி யாகோப், புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டார். இவர் அந்தநாட்டின் ஒன்பதாவது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்