Skip to main content

நாட்டு மக்களை காப்பாற்ற தவறிவிட்டேன்- மன்னிப்பு கோரினார் ரணில்

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

இலங்கை குண்டுவெடிப்பு சம்வபவத்திற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார். 

 

 I failed to save the people of the country - Ranil apologized

 

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதில் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகத்தையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் படங்களை  நேற்று இலங்கை காவல்துறை வெளியிட்டிருந்தது. 

 

அதனையடுத்து இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த நிலையில் அவர் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

 

I failed to save the people of the country - Ranil apologized

 

இந்நிலையில் நாட்டு மக்களை காப்பாற்ற தவறியதற்கு தான் பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

 

மேலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேவாலய சீரமைப்பை மேற்கொள்ளவேன். சர்வதேச நாடுகளின் உதவியுடன் தீவிரவாதத்தை ஒழிப்பேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார் ரணில்.   

 

 

சார்ந்த செய்திகள்