Skip to main content

நேபாளம் காத்மண்டுவில் விமானவிபத்து! - 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

வங்காளதேசத்தில் இருந்து காத்மண்டுவில் உள்ள விமானநிலையத்திற்கு வந்துகொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது.

 

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ளது திருபுவான் விமானநிலையம். வங்காளதேசம் தாக்காவில் இருந்து 67 பேரை ஏற்றிக்கொண்டு இந்த விமானநிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த யூ.எஸ்.-பங்க்ளா ஏர்லைன்ஸ் விமானம், அதற்கு அருகாமையிலுள்ள கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கரும்புகை சூழ்ந்திருந்த நிலையில் ஏராளமானோர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

 

 

விமானத்தில் பயணித்த 67 பேரில் 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் முழுவதும் சேதமடைந்துள்ள நிலையில், மீதமிருந்த பயணிகள் உடல் கருகி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

 

விமானம் தரையிரங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் திருபுவான் விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். விபத்து நடந்துள்ளதை அடுத்து விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

நேபாளம் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கையால் மக்கள் அச்சம்

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Nepal Earthquake; People fear due to rising death toll

 

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த  நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்பட்டது. 

 

இந்த நிலையில், காயமடைந்தவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அந்த மருத்துவமனை நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150யை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்கு வெளியே தங்கியிருக்கின்றனர்.

 

 

 

Next Story

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Nepal earthquake lost life toll rises to 128

 

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்படுகிறது.