Skip to main content

கரோனா காலத்திலும் கொட்டிய கோடிகள்... பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய எலான் மஸ்க்!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

Elon Musk

 

 

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 

கரோனா நெருக்கடி காரணமாக உலகெங்கும் பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் பல முன்னணி நிறுவனங்களும் வேலையாட்கள் குறைப்பு, உற்பத்தி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், கரோனா நெருக்கடி மிகுந்த இக்காலத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரியான எலான் மஸ்க் சொத்து மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

 

டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் உயர்ந்ததையடுத்து, அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எலான் மஸ்க் நடப்பு ஆண்டில் மட்டும் 100.3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளார். 

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்தி மூன்றாம் இடத்தைக் கைப்பற்றிய எலான் மஸ்க், தற்போது 127.9 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி, பில்கேட்ஸ் இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

 

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 182 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்