Skip to main content

அழகா இருப்பது குற்றமா? - அவஸ்தையில் சிக்கிய விமானநிலைய ஊழியர்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

பார்ப்பதற்கு அழகாக, பலரைக் கவரும் விதமாக இருந்த விமானநிலைய ஊழியர் அதிகம்பேரின் கவனத்தைப் பெற்றிருந்தாலும், விமானநிலைய நிர்வாகம் அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

 

சீனாவில் உள்ளது ஜியாமென் விமானநிலையம். இங்குள்ள ரன்வேயில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஊழியரின் அழகில் மயங்கிய பெண் ஒருவர், அவரை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வைரலாக்கிவிட்டார். பத்து லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவைப் பார்த்து, பகிர்ந்து, புகழ்ந்துள்ளனர். சிலர் ‘தென்கொரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகர் சாங் ஜூங் கீ போலவே இவர் இருக்கிறார்’ என்று பதிவிட்டிருந்தனர்.

ஆனால், விமானநிலைய அதிகாரி அந்த வாலிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். வேலை சமயத்தில் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு ஸ்டைலாக இருந்தது, முறையான சீருடை அணியாதது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது வருமானத்தில் 10 சதவீதத்தைக் குறைத்துள்ளது விமானநிலைய நிர்வாகம். 

 

‘என்மேல் தவறிருப்பது உண்மைதான். அதை நான் களைந்துகொள்கிறேன். என் வீடியோவை வெளியிட்ட பெண்ணை யாரும் திட்டவேண்டாம். அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பதை உணர்கிறேன். வெகுவிரைவாக நான் பிரபலமாகிவிட்டதற்கு அவருக்குத்தான் நான் நன்றி கூறவேண்டும்’ என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பரந்தூர் ஏர்போர்ட்; இரண்டாம் கட்டமாக வெளியான திடீர் அறிவிப்பு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Notice to acquire land for Parantur Airport

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வகுடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிலம் குறித்த பாக்கியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடாவூரில் நிலம் எடுப்பு அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.